/* */

மீண்டும் ஒரு நாங்குநேரி சம்பவம்! பட்டியலின மாணவர் மீது தாக்குதல்!

கோவில்பட்டி அருகே மீண்டும் ஒரு நாங்குநேரி சம்பவம் நடைபெற்றுள்ளது.

HIGHLIGHTS

மீண்டும் ஒரு நாங்குநேரி சம்பவம்! பட்டியலின மாணவர் மீது தாக்குதல்!
X

நாங்குநேரியில் வீடு புகுந்து மாணவனை வெட்டிய கொடூர செய்தி தமிழகத்தை உலுக்கியது. அந்த நிகழ்வில் வடு ஆறுவதற்குள் மீண்டும் அதே மாதிரியான ஒரு சம்பவம் நடந்துள்ளது மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் நடைபெற்ற சம்பவத்தைப் போலவே தற்போது கோவில்பட்டியில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. மாணவர் ஒருவரை சக மாணவர்கள் 10 பேர் சேர்ந்து தாக்கியுள்ள சம்பவம் இந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவில்பட்டி அருகே அமைந்துள்ளது கழுகுமலை. இங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பட்டியலின மாணவர் ஹரிபிரசாத் மீது அவருடன் பயிலும் சக மாணவர்கள் 10 பேர் சேர்ந்து கொடூர தாக்குதல் நடத்தியுள்ளனர். 11ம் வகுப்பு மாணவர்களுக்கு இடையே இப்படி சண்டை நடைபெறுவது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கு காரணம் சாதி ரீதியிலான மோதல்தான் என்கின்றனர். ஆரம்பத்தில் இரு மாணவர்களுக்கு இடையே நடந்த சின்ன சின்ன உரசல்கள் நாளடைவில் சாதி ரீதியிலான மோதலாக மாறியுள்ளது. வேறு இரண்டு மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற சண்டையை விலக்கி விடச் சென்றிருக்கிறார் மாணவர் ஹரிபிரசாத்.

அப்போது பட்டியலினத்தைச் சேர்ந்த நீ எப்படி எங்கள் விசயத்தில் தலையிடலாம் என்று ஹரிபிரசாத்தின் மீது சண்டை திரும்பியிருக்கிறது. வழக்கம்போல அன்று மாலை பள்ளி முடிந்து அனைவரும் வீடு திரும்பிவிட்டனர்.

ஆனால் ஒரு கும்பல் ஹரிபிரசாத்தின் ஊருக்கு பைக்கில் சென்றுள்ளனர். லட்சுமிபுரத்தில் ஹரிபிரசாத்தின் வீட்டைத் தேடி கண்டுபிடித்துள்ளனர். அந்த நேரத்தில் ஹரிபிரசாத் வெளியே நடந்து வந்து கொண்டிருப்பதை பார்த்தவர்கள் சாதியைச் சொல்லி கடுமையாக திட்டியிருக்கிறார்கள். மேலும் ஹரிபிரசாத்தை கடுமையாக தாக்கியும் காயப்படுத்தியிருக்கின்றனர். பின்னர் கொன்றுவிடுவதாக மிரட்டிவிட்டு 10 பேரும் கிளம்பிச் சென்றுவிட்டனர்.

அக்கம்பக்கத்தினர் பார்த்து இந்த விசயத்தை ஹரியின் பெற்றோரிடம் சொல்ல உடனடியாக அவரை மீட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர்.

இதுதொடர்பாக கழுகுமலை காவல்நிலையத்தில் தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக கல்லூரி மாணவர்கள் இருவர் பள்ளி மாணவர்கள் 2 பேர் உள்பட மொத்தம் 5 பேரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 18 Aug 2023 7:14 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?