/* */

ஓடும் பேருந்தில் ஆசிரியையிடம் நகை திருட்டு; 3 பேர் கைது - 35 பவுன் நகை மீட்பு

கோவில்பட்டியில் ஓடும் பேருந்தில் பெண்களிடம் நகை திருட்டில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்து 35பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

ஓடும் பேருந்தில் ஆசிரியையிடம் நகை திருட்டு; 3 பேர் கைது - 35 பவுன் நகை மீட்பு
X

கோவில்பட்டி பகுதியில் ஓடும் பேருந்தில் பெண்களிடம் நகை திருட்டில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 10லட்ச ரூபாய் மதிப்புள்ள 35பவுன் தங்கநகையை பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் முத்துராஜ் மனைவி சுதா (35) என்பவர் கடந்த 23ம் தேதி திருநெல்வேலியிருந்து கோவில்பட்டிக்கு அரசு பேருந்தில் பயணித்தபோது கயத்தாறு பேருந்து நிலையத்தில் பேருந்து வந்தபோது தனது கைப்பயில் இருந்த 20 சவரன் தங்க நகைகள் திருடு போயுள்ளது. இதுகுறித்து சுதா அளித்த புகாரின் பேரில் கயத்தாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதுகுறித்து மாவட்ட எஸ்பி ஜெயக்குமார், கோவில்பட்டி டிஎஸ்பி உதயசூரியன் மேற்பார்வையில் கயத்தாறு இன்ஸ்பெக்டர் ஆய்வாளர் முத்து தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் அந்தோணி திலீப், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் குமார், காவலர்கள் பாலகிருஷ்ணன், பாலமுருகன், சத்திரியன், பெண் காவலர்கள் முனீஸ்வரி, முத்துலதா மற்றும் செல்வி. முருகேஷ்வரி ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து சம்மந்தப்பட்ட எதிரியை கண்டுபிடித்து விரைந்து கைது செய்து திருடிய நகைகளை மீட்குமாறு உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து கயத்தார் புதிய பஸ் நிலைய பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டதில் 2 பெண்கள் நகை திருட்டி ஈடுபட்டது தெரியவந்தது. இந்நிலையில் நேற்று கயத்தாறு புதிய பேருந்து நிலையத்தில் வாகன தனிக்கை மேற்கொண்ட போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த இரண்டு பெண்களை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் தூத்துக்குடி அண்ணாநகரைச் சேர்ந்தவர்களான அய்யப்பன் மனைவி காளியம்மாள் (23) மற்றும் முத்துராஜா (எ) கீரி மனைவி முத்துமாரி (எ) தமிழரசி (22) என்பதும் கடந்த 23.08.2021 அன்று பேருந்தில் சுதாவின் பையிலிருந்து தங்க நகைகளை திருடியதும் தெரியவந்தது.

மேலும் இவர்கள் தூத்துக்குடி வடபாகம், நாலாட்டின்புதூர் மற்றும் சிப்காட் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் 10 பவுன் நகைகள் திருடியிருப்பதும், திருடிய நகைகளை அம்பாசமுத்திரம் வடக்கு ரத வீதியைச் சேர்ந்த லட்சுமணன் மகன் அய்யப்பன் (35) என்பவரிடம் கொடுத்துள்ளதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து தனிப்படையினர் 3 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள 35 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்துள்ளனர். நகை திருட்டில் 3 பேரைக் கைது செய்த தனிப்படையினரை எஸ்பி ஜெயக்குமார் நேரில் சென்ற பாராட்டினார்.

இதனை தொடர்ந்து மாவட்ட எஸ்.ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஓடும் பேருந்தில் நகை திருட்டில் ஈடுபட்ட 2 பேர், நகைகளை வாங்கி வைத்திருந்த ஒருவர் என 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பேருந்தில் செல்லும் வயதான பெண்கள், நடுத்தர குடும்ப பெண்களிடம் நைசாக பேசுவது, குழந்தையை அழ வைத்து கவனத்தை திசை திரும்பி நகைகளை திருடுவது, கோவில் திருவிழா கூட்டத்திற்குள் சென்று நகைகளை திருடி வந்துள்ளனர். இரண்டு அல்லது 3 பெண்கள் சேர்ந்து தான் செய்து வந்துள்ளனர்.

பேருந்துகளில் பயணம் செய்யும் போதோ, கோவில் திருவிழாவிற்கு செல்லும் போது, பெண்கள் ஜாக்கிரையதாக இருக்க வேண்டும், இந்த கும்பல் நெல்லையில் இருந்து திருச்சி ஜெயங்கொண்டம் வரை பேருந்தில் திருட்டில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கந்து வட்டி தொடர்பான புகார் வந்தால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும், காவலர்களின் நலனையும் நாம் பார்க்கிறோம், அதே நேரத்தில் குற்றவாளிகளுடன் காவலர்கள் தொடர்பு வைத்துக் கொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Updated On: 26 Aug 2021 1:41 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்