Begin typing your search above and press return to search.
பொன் ஏர் திருவிழாவை தொடங்கி வைத்த முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ
விவசாயம் செழிக்க வேண்டி சித்திரைத் திருநாளை பொன் ஏர் பூட்டும் திருநாளாக விவசாயப் பெருமக்கள் கொண்டாடி வருகின்றனர்.
HIGHLIGHTS
கோவில்பட்டி அருகே பொன் ஏர் திருவிழாவை தொடங்கி வைத்த முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ எம்.எல்.ஏ.
தமிழ் புத்தாண்டை வரவேற்கும் விதமாகவும் , இயற்கை இடர்பாடுகள் இல்லாமல் விவசாயம் செழிக்க வேண்டி சித்திரைத் திருநாளை பொன் ஏர் பூட்டும் திருநாளாக விவசாயப் பெருமக்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் கோவில்பட்டி அருகே உள்ள ஜமீன் தேவர் குளத்தில் நடைபெற்ற பொன்னேர் பூட்டும் திருவிழாவை முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ டிராக்டரை இயக்கி தொடங்கி வைத்தார் .