/* */

தூத்துக்குடி அருகே தலைமைக் காவலர் தூக்கிட்டுத் தற்கொலை

தூத்துக்குடி அருகே புளியம்பட்டியில் தலைமைக் காவலர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

HIGHLIGHTS

தூத்துக்குடி அருகே தலைமைக் காவலர் தூக்கிட்டுத் தற்கொலை
X

தற்கொலை செய்துக் கொண்ட தலைமைக் காவலர் கொடிவேல்.

தூத்துக்குடி மாவட்டம், புளியம்பட்டி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்தவர் கொடிவேல். இவர் புளியம்பட்டி காவல் நிலைய வளாகத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் இருந்த தலைமைக் காவலர் கொடிவேல் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து தற்கொலை செய்து கொண்ட தலைமை காவலர் கொடிவேல் உடலை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொடிவேல் தற்கொலை குறித்து புளியம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவ இடத்துக்கு மணியாச்சி காவல் துணை கண்காணிப்பாளர் லோகேஸ்வரன் தலைமையிலான போலீசார் சென்று விசாரணை மேற்கொண்டனர். தலைமைக் காவல் தற்கொலை சம்பவம் குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனும் தகவல்களை கேட்டறிந்து உள்ளார்.

காவலர் குடியிருப்பில் தலைமை காவலர் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தூத்துக்குடி மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குடும்பப் பிரச்னை காரணமாக தலைமைக் காவலர் கொடிவேல் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு காரணம் ஏதும் உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் ஆங்காங்கே காவல் துறையில் பணியாற்றுவோர் தற்கொலை செய்துக் கொள்ளும் சம்பவம் அதிகரித்து வருகிறது. மன அழுத்தம் காரணமாகவே இந்த தற்கொலை சம்பவங்கள் நிகழ்வதாக கூறப்படுகிறது. எனவே, காவல் துறையினருக்கு தொடர்ந்து மனஅழுத்தத்தில் மீள்வது குறித்த பயிற்சி வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 14 Aug 2023 7:17 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்