வாக்காளர் அடையாள அட்டை இலவசமாக வழங்கப்படும் : மாவட்ட ஆட்சியர் தகவல்
திருவாரூர் மாவட்டத்திலுள்ள இ-சேவை மையங்களில் மாற்று புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை இலவசமாக வழங்கப்படும்
HIGHLIGHTS
வாக்காளர் அடையாள அட்டைகள் தேவைப்படும் வாக்காளர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்றார் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் .ப.காயத்ரி கிருஷ்ணன்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட தகவல்: திருவாரூர் மாவட்டத்திலுள்ள இ-சேவை மையங்களில் மாற்று புகைப்பட வாக்காளர் அடையாள அட்டைகள் தேவைப்படும் வாக்காளர்களுக்கு இலவசமாக வழங்கப்படும். இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலகம் அனைத்து மாற்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகளையும், வாக்காளர்களுக்கு இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளது.
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து 342 அரசு இ-சேவை மையங்களிலும் மாற்று புகைப்பட வாக்காளர் அடையாள அட்டைகள் தேவைப்படும் வாக்காளர்களுக்கு இலவசமாக வழங்கப்படும். இத்திட்டம் 01.10.2021 முதல் நடைமுறைக்குவரும். எனவே அனைத்து வாக்காளர்களும் இச்சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம்.