/* */

திருவாரூர் ரயில் நிலையத்தில் திருச்சி ரயில்வே கோட்ட துணை மேலாளர் ஆய்வு

திருவாரூர் ரயில் நிலையத்தில் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் ராமலிங்கம் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

திருவாரூர் ரயில் நிலையத்தில் திருச்சி ரயில்வே கோட்ட துணை மேலாளர் ஆய்வு
X
திருவாரூர் ரயில் நிலையத்தில் திருச்சி கோட்ட ரயில்வே துணை மேலாளர் ராமலிங்கம் ஆய்வு செய்தார்.

திருவாரூர் ரயில் நிலையத்தில் திருச்சி ரயில்வே கோட்ட துணை மேலாளர் ராமலிங்கம் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் தெரிவித்த போது

திருவாரூர்-காரைக்குடி இடையே உள்ள 75 ரயில்வே கேட்களில் முன்னாள் ராணுவத்தினர்கள் தற்காலிக ரயில்வே கேட் கீப்பர்களாக பணி நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள். பணிநிறைவு அடைந்ததும் அனைத்து ரயில் சேவைகளும் முழுமையாக தொடங்கப்படும். திருவாரூர் ரயில் நிலையத்தில் 1வது மற்றும் 4-வது நடைமேடை களில் இரண்டு எஸ்கலேட்டர் பொருத்த நடவடிக்கை எடுக்க பட்டுள்ளது.விரைவில் பொருத்தப்படும்.

இரண்டு மற்றும் மூன்றாவது நடைமேடைகள் உயரப்படுத்த வேண்டிய பணிகள் உள்ளதால் அதன் பின்னர் அதற்கு எஸ்கலேட்டர் பொருத்தப்படும் என தெரிவித்தார்.

மேலும் மார்ச் மாதத்திற்குள் அனைத்து ரயில் சேவையும் தொடங்கப்படுமா? என்ற கேள்விக்கு ரயில்வே கேட் கீப்பர்கள் தேர்வு நிறைவடைந்த பின்னர் உடனடியாக பணி நியமனம் செய்த உடன் அனைத்து ரயில் சேவை விரைவில் தொடங்கப்படும் என தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியின்போது திருவாரூர் ரயில் உபயோகிப்பாளர் சங்க செயலாளர் பாஸ்கர் , திருவாரூர் விஜயபுரம் வர்த்தகர சங்க நிர்வாகிகள் மற்றும் திருவாரூர் வணிகர் சங்க பேரமைப்பு நிர்வாகிகள் உள்ளிட்டோர் பல்வேறு கோரிக்கைகள் மனு அளித்தனர்.

Updated On: 21 Jan 2022 8:42 AM GMT

Related News