/* */

காயமுற்று பறக்க முடியாத ஆண் மயிலுக்கு சிகிச்சை

ரோட்டரி சங்கம் சார்பில் பறக்க முடியாத மயிலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

HIGHLIGHTS

காயமுற்று பறக்க முடியாத ஆண் மயிலுக்கு சிகிச்சை
X

காயமடைந்த மயிலுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தாலுக்கா, காக்கா கோட்டூர் பகுதியில் சுமார் இரண்டு வயது மதிக்கத்தக்க தேசிய பறவையான ஆண் மயில் உடலில் காயங்களுடன் பறக்கமுடியாமல் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் திருவாரூர் ரோட்டரி கிளப் ஆப் கிங்ஸ் சங்கம் சார்பில் கிராமத்திற்கு சென்று, பார்வையிட்டு உடனடியாக கால்நடை பராமரிப்பு துறை மற்றும் வனத்துறை அலுவலகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

கால்நடைதுறை மண்டல இணை இயக்குனர் தனபாலன் விரைந்து வந்து உடனடியாக மயிலுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக திருவாரூர் கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு டாக்டர் விஜயகுமார் மருத்துவ குழுவினரால் சிறப்பாக சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் திருவாரூர் வனச்சரகம் வனகாப்பாளர் முகம்மது அப்துல் சுக்கூர், கிங்ஸ் தலைவர் ராஜ் (எ) கருணாநிதியிடம் மயில் ஒப்படைக்கப்பட்டது.

நிகழ்வின் போது கிங்ஸ் சங்க செயலாளர் உத்திராபதி, அழகப்பா, ராஜகணபதி, வேல்முருகன் தன்னார்வலர் மாதவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Updated On: 1 Jan 2022 9:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?