Begin typing your search above and press return to search.
கனமழை அறிவிப்பால் திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
திருவாரூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
HIGHLIGHTS
வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக டெல்டா மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி இன்றைய தினம் திருவாரூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.
குறிப்பாக திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நீடாமங்கலம், நன்னிலம், மன்னார்குடி, முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நாளைய தினமும் திருவாரூர் மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் மாவட்டத்தில் இயங்கும் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.