/* */

திருவாரூர்- காரைக்குடி வழித்தடத்தில் அதிவேக ரயில் சோதனை ஓட்டம்

திருவாரூர்- காரைக்குடி வழித்தடத்தில் 110 கிலோ மீட்டர் வேகத்தில் அதிவேக ரயில் சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது.

HIGHLIGHTS

திருவாரூர்- காரைக்குடி வழித்தடத்தில் அதிவேக ரயில் சோதனை ஓட்டம்
X

ஓஎம்எஸ் ஆய்வு அதிவேக விரைவு ர‌யி‌ல்.

திருவாரூர் - திருத்துறைப்பூண்டி - காரைக்குடி ரயில் வழித்தடத்தில் ரயில்களின் வேகத்தை அதிகரிக்கும் பொருட்டு இருப்புபாதையின் தன்மை, தண்டவாள அதிர்வுகள் ஆகியவற்றை ஆய்வு செய்திட ஓஎம்எஸ் ஆய்வு அதிவேக விரைவு ர‌யி‌ல் மணிக்கு 110 கி.மீட்டர் வேகத்தில் இயக்கி ஆய்வுப் பணி இன்று நடைபெற்றது.

இந்த ஆய்வு திருவாரூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை வழியாக காரைக்குடி ரயில் நிலையம் வரை சென்றது. மீண்டும் அதேபோல மறுமார்க்கத்தில் காரைக்குடியில் இருந்து புறப்பட்டு முக்கிய ரயில் நிலையங்களில் உள்ள கிராசிங் பாதைகளில் தற்போது 15கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டுள்ள நிலையில் மணிக்கு 30 கிலோ மீ‌ட்ட‌ர் வேகத்தில் இயக்கப்பட்டு திருவாரூர் ரயில் நிலையம் திரும்ப உள்ளதாக ரயில்வே துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த ரயில் சோதனை ஓட்டத்தில் மூலம் தற்போது டெமு ரயில் சேவை, விரைவு ரயில் சேவைகள் தொடங்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 19 Feb 2022 2:27 PM GMT

Related News

Latest News

  1. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  2. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்
  3. இந்தியா
    ஐஏஎஸ், ஐபிஎஸ் படிப்பிற்கு மாணவர்களை தூண்டிய திரைப்படம் பற்றி
  4. சேலம்
    சேலம் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி வேட்புமனு ஏற்பு
  5. தேனி
    பல மணி நேர பரிசீலனைக்கு பிறகு டிடிவி தினகரனின் வேட்பு மனு ஏற்பு
  6. அரசியல்
    தமிழகத்தில் இருந்து ஒரு பிரதமர்: அமித்ஷா கடந்த கால பேச்சின் பின்னணி
  7. அரசியல்
    அரசியலுக்கு அப்பாற்பட்ட நட்பு: இது ஆரோக்கியமான அரசியலுக்கு அறிகுறி
  8. அரசியல்
    ‘ரூ.1000 கிடைக்கவில்லை’தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சரிடம் முறையிட்ட...
  9. கோவை மாநகர்
    கோவை மாவட்ட ஆட்சியரை கண்டித்து நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்..!
  10. குமாரபாளையம்
    பள்ளிபாளையம் அ.தி.மு.க. தேர்தல் பணிமனை திறப்பு..!