/* */

திருவாரூர் மாவட்டத்தில் மாணவர்களுக்கு கூடுதல் பஸ் இயக்க கோரி மனு

திருவாரூர் மாவட்டத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க கோரி மாணவர் சங்கத்தினர் அரசு போக்குவரத்து கழக மேலாளரிடம் மனு கொடுத்தனர்.

HIGHLIGHTS

திருவாரூர் மாவட்டத்தில் மாணவர்களுக்கு  கூடுதல் பஸ் இயக்க கோரி மனு
X

திருவாரூர் மாவட்டத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் அரசு போக்குவரத்து கழக மேலாளரிடம் மனு அளித்தனர்.

இந்திய மாணவர் சங்கத்தின் திருவாரூர் நகர குழு சார்பில் அதன் மாவட்ட தலைவர் ஆனந்த், துணை தலைவர் சந்தோஷ், நகர செயலாளர் சுர்ஜித் ஆகியோர் தமிழ்நாடு அரசுபோக்குவரத்து கழக திருவாரூர் கிளை மேலாளரிடம் ஒரு மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பேருந்துகளில் அதிக அளவில் பயணிப்பதால் கூட்ட நெரிசல் காரணமாக மாணவர்களுக்கு கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது.

கொரோனா தொற்றின் காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் கிராமப்புறங்களிலிருந்து வரும் பேருந்துகள் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே வருவதால் மாணவர்கள் முண்டியடித்துக்கொண்டு படியில் தொங்கியபடி ஆபத்தான நிலையில் பயணம் செய்கின்றனர். இதனால் மாணவர்களின் நலன் கருதி அதிக அளவு பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Updated On: 22 Sep 2021 12:30 PM GMT

Related News