/* */

திருவாரூர் மாவட்டத்தில் 20 ரவுடிகள் கைது - போலீசார் அதிரடி

திருவாரூர் மாவட்டத்தில், பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 20 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

HIGHLIGHTS

திருவாரூர் மாவட்டத்தில் 20 ரவுடிகள் கைது  - போலீசார் அதிரடி
X

திருவாரூர் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் விஜயகுமார்

திருவாரூர் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் விஜயகுமார் உத்தரவுபடி, மாவட்டத்தில் நள்ளிரவு முதல் காவல் நிலையங்களில் பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடைய ரவுடிகளின் பட்டியலில் உள்ள ரவுடிகளை கைது செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, திருவாரூர் நகர காவல் நிலையத்தில் கொலை, கொள்ளை மற்றும் பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளி பட்டியலில் உள்ள 2ரவுடிகள் உட்பட, நன்னிலம், திருவாரூர் தாலுக்கா, முத்துப்பேட்டை, பேரளம், குடவாசல் உட்பட மாவட்டத்தில் பல்வேறு காவல்நிலையங்களில் குற்றவாளி பட்டியலில் உள்ள, 20 ரவுடிகளை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.

Updated On: 25 Sep 2021 4:00 AM GMT

Related News