Begin typing your search above and press return to search.
திருவாரூர்: ரோட்டரி சங்கம் சார்பில் விதவைகள் மறுமண சந்திப்பு நிகழ்ச்சி
திருவாரூர் ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெற்ற விதவைகள் மறுமண சந்திப்பு நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டு வரன் தேடினர்.
HIGHLIGHTS
திருவாரூர் ரோட்டரி சங்கத்தின் பொன்விழா ஆண்டையொட்டி திருவாரூர் தனியார் பள்ளி வளாகத்தில் விதவைகள் மறுமண சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதிலும் இருந்து விவாகரத்து பெற்றோர் மற்றும் கணவன் அல்லது மனைவியை இழந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அவர்கள் அனைவரும் ஒவ்வொருவராக மேடையில் அறிமுகப்படுத்தப்பட்டு வரன் தேடினர். மறுமணம் மட்டுமல்லாமல் வயது அதிகமான முதல் திருமணம் செய்யாமல் இருப்பவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வரன் தேடினர்.இந்நிகழ்ச்சியில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.