/* */

காவல்துறையில் பயன்பாடற்று இருந்த வாகனங்கள் ரூ. 12.54 லட்சத்துக்கு ஏலம்

திருவாரூரில் காவல் துறைக்கு சொந்தமான ஜீப் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கான ஏலம் எஸ்.பி. விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது.

HIGHLIGHTS

காவல்துறையில் பயன்பாடற்று இருந்த வாகனங்கள் ரூ. 12.54 லட்சத்துக்கு ஏலம்
X

திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காவல் துறைக்கு சொந்தமான பயன்பாடற்ற வாகனங்கள் ஏலம் விடப்பட்டது.

போலீசார் உபயோகப்படுத்தி வந்த அரசு கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பின்னர் ஏலம் விடுவது வழக்கம். அதன்படி இன்று காவல்துறைக்கு சொந்தமான கார் , ஜீப் உள்ளிட்ட 12 நான்கு சக்கர வாகனங்கள்,38 இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட மொத்தம்50 வாகனங்கள் திருவாரூர் விளமல் ஆயுதப்படை மைதானத்தில் ஏலம் விடப்பட்டன.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் நேரில் வாகனங்களை ஆய்வு செய்து பின்னர் ஏலத்தை தொடங்கி வைத்தார் .இந்த ஏலத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.இதன் மூலம் கிடைக்கப்பெற்ற 12.54 இலட்சம் ரூபாய் அரசு கணக்கில் சேர்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அன்பழகன், ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் சலீம் ஜாவித் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Updated On: 19 Jan 2022 3:38 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் கூடுதல் பேருந்துகள் இல்லாததால் பக்தர்கள் அவதி
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி : 2ம் நாளான நேற்று ஆயிரக்கணக்கில்...
  4. வந்தவாசி
    யோக நரசிம்ம பெருமாள் கோயிலில் சித்திரை மாத சுவாதி விழா
  5. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  6. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  7. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  8. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  9. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  10. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்