திருவாரூர்: புதிய ஊராட்சி மன்ற கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருவாரூர் மாவட்டத்தில் புதிய ஊராட்சி மன்ற கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார்.
HIGHLIGHTS
திருவாரூர் மாவட்டத்தில் புதிய ஊராட்சி மன்ற கட்டுமான பணிகளை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் ஆய்வு செய்தார்.
இவ்ஆய்வில் மாவட்ட ஆட்சியர் கூறும்போது
திருவாரூர் மாவட்டத்தில் ஊராட்சி அளவில் சாலை, குடிநீர் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. கிராம ஊராட்சிகளில் உள்ள மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் தொடர்பான கோரிக்கைகளும் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருகிறது. அந்தவகையில், திருவாரூர் வட்டம், பழையவலம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.22.65 இலட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சிமன்ற அலுவலகம் கட்டுவதற்கான முதற்கட்ட பணிகள் ஆய்வுசெய்யப்பட்டது. பணிகளை தரமாக மேற்கொள்ள பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
இவ்ஆய்வில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் செயற்பொறியாளர் சடையப்பன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் புவனேஸ்வரி மற்றும் பாஸ்கர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.