/* */

திருவாரூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் உணவின் தரம் குறித்து அமைச்சர் ஆய்வு

திருவாரூர் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு தயாரிக்கப்படும் உணவை நேரில் சென்று ஆய்வு செய்த அமைச்சர் மெய்யநாதன்

HIGHLIGHTS

திருவாரூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் உணவின் தரம் குறித்து அமைச்சர் ஆய்வு
X

திருவாரூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் உணவின் தரம் குறித்து அமைச்சர் மெய்யநாதன் நேரில் ஆய்வு  

திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு குறித்து அமைச்சர் மெய்யநாதன் மற்றும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் ஆகியோர் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு செய்தனர்.

உணவின் தரம் குறித்து கண்டறிய சமையலறைக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு அங்கு தயாரிக்கப்படும் இட்லி, சாம்பார் உள்ளிட்டவற்றை சாப்பிட்டு பார்த்து உணவின் தரம் மற்றும் சுவையினை ஆய்வு செய்தனர். அப்போது கொரானா நோயாளிகளுக்கு தரமான உணவு வழங்கப்படுகிறதா என நோயாளிகளுக்கே நேரடியாக செல்போனில் தொடர்புகொண்டு அவர்களிடம் விசாரித்தார்.

தொடர்ந்து திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வரிடம் நோயாளிகளுக்கு தரமான உணவு வழங்க வேண்டும் என அறிவுறுத்தினார். பின்னர் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பின்புறம் கொரோனா நோயாளிகள் தங்குவதற்காக ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் கூடிய கட்டிடத்தின் கட்டுமான பணியை ஆய்வு செய்து விரைந்து பணியை முடிக்க ஆலோசனை வழங்கினார்

Updated On: 6 Jun 2021 8:00 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    எடப்பாடிக்கே துரோகம் செய்த நிர்வாகிகள் | எதிர்பார்க்காத அதிமுக தலைமை |...
  2. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  3. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  4. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  5. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  6. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் அதிமுக சார்பில் கோடை கால தண்ணீர் பந்தல் திறப்பு
  8. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  9. ஈரோடு
    ஈரோடு: கடம்பூர் மலைப்பகுதியில் அரசு பேருந்தை வழிமறித்த யானையால்
  10. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு