/* */

திருவாரூர் மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டம் துவக்கம்

திருவாரூர் அருகே இல்லம் தேடிக்கல்வி மையத்தினை மாவட்ட ஆட்சியர் காயத்ரி சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கலைவாணன் தொடங்கி வைத்தனர்.

HIGHLIGHTS

திருவாரூர் மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டம் துவக்கம்
X

திருவாரூர் மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வி திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

தமிழக முதல்வர் கொரோனா பெருந்தொற்று பொது முடக்க காலங்களில் பள்ளிகளில் 1 வகுப்பு முதல் 8 வகுப்பு வரை பயிலுகின்ற மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளை குறைத்திடும் வகையில் இல்லம் தேடிக்கல்வி திட்டத்தினை மாநிலம் முழுவதும் செயல்படுத்திட உத்தரவிட்டுள்ளார்.

இதன் தொடர்ச்சியாக திருவாரூர் அருகே தண்டலை ஊராட்சியில் இல்லம் தேடிக்கல்வி மையத்தினை மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் திருவாரூர் தி.மு.க. மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி.கலைவாணன் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.

திருவாரூர் மாவட்டத்தில் திட்ட இலக்கான 3505 மையங்களில் தற்போது வரை தேர்வு செய்யப்பட்ட 1100 தன்னார்வலர்களைக் கொண்டு கற்றல் மையம் இன்று முதல் மாவட்டம் முழுவதும் செயல்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியில் திருவாரூர் ஒன்றியக்குழுத்தலைவர் தேவா, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவித்திட்ட அலுவலர் பாலசுப்ரமணியன், ஒன்றியக்குழு உறுப்பினர் முருகேசன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Updated On: 4 Jan 2022 6:45 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...