Begin typing your search above and press return to search.
திருவாரூர் மாவட்ட காவல் துறை சார்பாக விவசாயிகள் குறைதீர் கூட்டம்
விவசாயிகளுக்கு சிறப்பு குறை தீர் கூட்டம் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது.
HIGHLIGHTS
திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று முதல் முறையாக விவசாயிகளுக்கு சிறப்பு குறைதீர் கூட்டம் எஸ்.பி. விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் முக்கிய நோக்கமாக விவசாயிகளின் வயல் வரப்பு பிரச்சனை ,வடிகால் ஆக்கிரமிப்பு காரணமாக தண்ணீர் செல்வதில் சிக்கல் உள்ளிட்ட சட்ட ரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் சமூக இடைவெளியை கடைபிடித்து தங்களது கோரிக்கை மனுக்களை எஸ்.பி.யிடம் அளித்தனர். இந்த மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு ஏற்படுத்தப்படும் என விவசாயிகளிடம் எஸ்.பி. விஜயகுமார் தகவல் தெரிவித்தார்.