/* */

திருவாரூரில் முதல்வர் திறந்த மாவட்ட பதிவாளர் அலுவலகம் பயன்பாட்டிற்கு வந்தது

திருவாரூரில் புதிதாக பதிவாளர் அலுவலகம் காணொலி காட்சி மூலம் திறக்கப்பட்ட நிலையில் ஆட்சியர் காயத்ரி குத்து விளக்கு ஏற்றினார்.

HIGHLIGHTS

திருவாரூரில் முதல்வர் திறந்த  மாவட்ட பதிவாளர் அலுவலகம் பயன்பாட்டிற்கு வந்தது
X

முதல்வரால் காணொலி காட்சி மூலம் திறக்கப்பட்ட திருவாரூர் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் கலெக்டர் காயத்ரி குத்துவிளக்கேற்றினார்.

தமிழக முதல்வராக மு. க. ஸ்டாலின் பதவியேற்றதிலிருந்து பல்வேறு மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டத்திற்கு மாவட்ட பதிவாளர் அலுவலகம் அமைக்கப்படும் என அறிவித்திருந்தார். இதுநாள் வரையிலும் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சங்கம் பதிவுசெய்யவும், பத்திர பதிவு செய்யவும் உள்ளிட்ட பல்வேறு பதிவு துறை சம்பந்தமான வேலைகளுக்கு திருவாரூரில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு சென்று அங்குள்ள பதிவாளரிடம் பதிவு பெற வேண்டிய சூழ்நிலை இருந்தது.

இந்நிலையில் தமிழக முதல்வர் இன்று திருவாரூர் மாவட்டத்திற்கு என புதிதாக பதிவாளர் அலுவலக கட்டிடத்தினை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதனை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் மற்றும் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசு, மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு, மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவர் சேகர் கலியபெருமாள், பத்திர பதிவுத்துறை துணைத் தலைவர் ஆனந்த், திருவாரூர் மாவட்ட பதிவாளர் ஜனார்த்தனன், திருவாரூர் ஒன்றிய பெருந்தலைவர் தேவா, திருவாரூர் நகர மன்றத் தலைவர் புவணப்பிரியா செந்தில், நகர்மன்ற உறுப்பினர் பிரகாஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 26 April 2022 1:24 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    புதிய நிதியாண்டில் முக்கிய நிதி மாற்றங்கள் என்ன தெரியுமா..?
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்ட கலெக்டர் உமா
  3. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சோபா,பெட் தயாரிக்கும் கடையில் திடீர் தீ விபத்து
  4. கும்மிடிப்பூண்டி
    ஊத்துக்கோட்டையில் அனுமதி பெறாமல் வாடகைக்கு செல்ல இருந்த 5 வாகனங்கள்...
  5. தென்காசி
    அதிமுகவிற்கு பொதுவுடமை நாம் தமிழர் கட்சி தலைவர் சஞ்சீவிநாதன் ஆதரவு
  6. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையம் சுகாதார நிலையம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
  7. இராஜபாளையம்
    திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ராஜபாளையத்தில் தமிழக அமைச்சர் பிரச்சாரம்
  8. கோவை மாநகர்
    40 இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் : கோவையில் பேசிய கனிமொழி...
  9. வீடியோ
    🔴LIVE : வடசென்னை வேட்பாளர் பால்கனகராஜ் ஆதரித்து பாஜக மாநில தலைவர்...
  10. கவுண்டம்பாளையம்
    பாஜக பொய் செய்திகளை பரப்பி வருகிறது : கனிமொழி குற்றச்சாட்டு