/* */

திருவாரூர்: நதிகளை இணைக்க வலியுறுத்தி சைக்கிள் பயணம்

நதிகளை இணைக்க வலியுறுத்தி தி.மு.க. பிரமுகர் திருவாரூரில் இருந்து சைக்கிள் பயணத்தை தொடங்கி உள்ளார்.

HIGHLIGHTS

திருவாரூர்: நதிகளை இணைக்க வலியுறுத்தி சைக்கிள் பயணம்
X

திருவாரூரில் சைக்கிள் பயணத்தை பூண்டி கலைவாணன் தொடங்கி வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டம் அம்மையார்குப்பம் பகுதியை சேர்ந்த சஞ்சீவி என்பவர் பல ஆண்டுகளாக தி.மு.க. உறுப்பினராக உள்ளார். இவர் இன்று திருவாரூரில் உள்ள மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் இல்லத்தின் முன்பிருந்து சைக்கிள் பயணத்தை தொடங்கினார்.

கருணாநிதி புகழை இந்தியா முழுவதும் பரப்பும் நோக்கத்துடனும், இந்தியா முழுவதும் உள்ள நதிகளை இணைக்க வலியுறுத்தியும் அவர் தொடங்கி உள்ள இந்த சைக்கிள் பயணத்தை திருவாரூர் மாவட்ட தி.மு.க.செயலாளரும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் துவக்கிவைத்தார்.

இந்த சைக்கிள்பயணமானது திருவாரூரிலிருந்து புறப்பட்டு திருக்குவளை சென்று கருணாநிதி இல்லத்தில் மரியாதை செலுத்திவிட்டு நாகப்பட்டினம், காரைக்கால், சிதம்பரம் வழியாக இந்தியா முழுவதும் செல்லும் என சஞ்சீவி கூறினார்.

Updated On: 22 Sep 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  4. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  6. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  7. வேலைவாய்ப்பு
    10ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு
  8. இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
  9. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதும்...
  10. தமிழ்நாடு
    முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நல உதவித் திட்டம் பற்றித் தெரியுமா?