/* */

திருத்துறைப்பூண்டியில் டாஸ்மாக் கடையில் மது வாங்க சென்றவர் மீது தாக்குதல்

திருத்துறைப்பூண்டியில் டாஸ்மாக் மதுபான கடைக்கு மது வாங்க சென்ற போது ஏற்பட்ட தகராறில் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

HIGHLIGHTS

திருத்துறைப்பூண்டியில் டாஸ்மாக் கடையில் மது வாங்க சென்றவர் மீது தாக்குதல்
X
அரிவாள் வெட்டில் காயம் அடைந்தவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சாமியப்பா நகரைச் சேர்ந்த மாரிமுத்து( 47) என்பவர் மது வாங்குவதற்காக டாஸ்மாக் மதுபான கடைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த நபர் மீது வாகனம் உரசியதால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது .அப்போது இரு சக்கர வாகனத்தின் முன்பகுதியை அந்த நபர் உடைத்துள்ளார். இருவருக்கும் வாய் தகராறு ஏற்படவே அந்த நபர் கத்தியால் மாரிமுத்துவின் தலையில் வெட்டி விட்டு தப்பி ஓடியுள்ளார். காயமடைந்த அவரை அருகிலிருந்தவர்கள் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இது குறித்து தகவலறிந்து வந்த திருத்துறைப்பூண்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தலையில் வெட்டிவிட்டு தப்பி ஓடிய நபரை தேடி வருகின்றனர்.

Updated On: 27 April 2022 2:08 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து...
  2. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவில் அசத்திய மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள்..!
  3. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு - எஸ்பி...
  4. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!
  5. குமாரபாளையம்
    கத்தேரி பிரிவில் விளையாட்டு மைதானம், அரசு ஆரம்ப சுகாதார மையம் அமைக்க...
  6. ஈரோடு
    ஈரோடு: தாளவாடி அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி பரிதாப உயிரிழப்பு
  7. காஞ்சிபுரம்
    அதிகளவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த ஆண்கள்..!
  8. காஞ்சிபுரம்
    12 மணி நேரம் தொடர் பணி : வருவாய்த்துறை ஊழியர்கள் பணிக்கு வரவேற்பு..!
  9. லைஃப்ஸ்டைல்
    அப்பாவின் கோபமும் மாயமாகும் அக்காவின் ஒற்றை சொல்லால்..!
  10. ஈரோடு
    ஈரோடு மக்களவைத் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பறையில் வைத்து...