/* */

பயிர் காப்பீடு வழங்காததால் செல்போன் கோபுரத்தின் மீது ஏறி போராட்டம்

திருத்துறைப்பூண்டி அருகே பயிர் காப்பீடு வழங்காததால் விவசாயி செல்போன் கோபுரத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்.

HIGHLIGHTS

பயிர் காப்பீடு வழங்காததால்  செல்போன் கோபுரத்தின் மீது ஏறி போராட்டம்
X

கலைச்செல்வன்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே சங்கேந்தி கிராமத்தைச் சேர்ந்தவர் கலைச்செல்வன். இவர் தனக்குச் சொந்தமான மூன்று ஏக்கர் நிலத்தில் சம்பா சாகுபடி மேற்கொண்டார். பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக அவரது பயிர்கள் முற்றிலுமாக சேதமடைந்தது.

அவர் பயிர் காப்பீடு செய்த நிலையில் அவரை தவிர்த்து அப்பகுதியில் காப்பீடு செய்த அனைவருக்கும் இழப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும் தனக்கு உடனடியாக இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் எனக்கூறி சங்கேந்தி பகுதியிலுள்ள செல்போன் கோபுரத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் அவரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உரிய இழப்பீடு பெற்றுத் தரப்படும் என உறுதி அளித்ததன் பேரில் அவர் கீழே இறங்கினார் .இதனையடுத்து எடையூர் காவல்துறையினர் அவரை கைது செய்து அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 28 Feb 2022 4:11 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்