Begin typing your search above and press return to search.
திருத்துறைப்பூண்டி மதுவிலக்கு பிரிவு காவலர்கள் 6 பேரை பணி இடைநீக்கம்
மதுபான கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யாத திருத்துறைப்பூண்டி மதுவிலக்கு பிரிவு காவலர்கள் 6 பேர் பணி இடைநீக்கம்
HIGHLIGHTS
கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டு இருந்தது. இந்நிலையில் ஜூலை 4-ஆம் தேதி திருத்துறைப்பூண்டி அருகே கச்சனம் பகுதியில் மதுவிலக்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது உடலில் மதுபாட்டில்களை மறைத்து புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்தலில் ஈடுபட்ட ரமேஷ் மற்றும் மனோகரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் அவர்கள் மீது வழக்குப்பதிவு மேற்கொள்ளாமல் அவர்களை விடுவித்ததாக கூறி திருத்துறைப்பூண்டி மதுவிலக்கு காவல் ஆய்வாளர் ஞான சுமதி ,உதவி ஆய்வாளர் வரலட்சுமி, தலைமைக் காவல் அலுவலர் சண்முகநாதன் ,ராஜா, காவலர்கள் பாரதிதாசன் விமலா ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து தஞ்சை சரக டிஐஜி பர்வேஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.