/* */

திருத்துறைப்பூண்டி அருகே மீனவர் தூக்குப்போட்டு தற்கொலை

திருத்துறைப்பூண்டி அருகே மீனவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது பற்றி போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

HIGHLIGHTS

திருத்துறைப்பூண்டி அருகே  மீனவர் தூக்குப்போட்டு தற்கொலை
X

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அலையாத்திக்காடு கந்தபரிச்சான் ஆறு வாய்கால் அருகே ஒருவர் தூக்கில் தொங்குவதாக முத்துப்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை செய்தனர்.

இதில் தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள துவரங்குறிச்சி மன்னங்காடு கிராமத்தை சேர்ந்த காமாட்சி மகன் மீனவர் வீரப்பன்(65) என்றும் இவர் குடும்பத்தை விட்டு பிரிந்து பல ஆண்டுகளாக முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரம் தெற்கு பள்ளியமேடு கிராமத்தில் வசித்து கடலுக்கு சென்று மீன் பிடித்து வந்ததாகவும், இவர் சில தினங்களாக கடும் மன உளைச்சலில் இருந்ததாகவும் ,இதனால் தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் மீனவர் வீரப்பன் உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 1 March 2022 10:26 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்