/* */

அம்பேத்கர் பிறந்தநாளுக்கு பேனர் வைத்த இளைஞர் மின்சாரம் தாக்கி பலி

திருத்துறைப்பூண்டி அருகே அம்பேத்கர் பிறந்தநாளுக்கு பேனர் வைத்த போது மின்சாரம் தாக்கி இளைஞர் பலியானார்.

HIGHLIGHTS

அம்பேத்கர் பிறந்தநாளுக்கு பேனர் வைத்த இளைஞர் மின்சாரம் தாக்கி  பலி
X

சின்னத்துரை

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே தில்லைவிளாகம் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் இவரது மகன் சின்னத்துரை (31). இவர் இன்று அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி பேனர் வைத்தபோது, அருகில் இருந்த மின்சார கம்பியில் பட்டதில், அவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த வந்த முத்துப்பேட்டை போலீசார், உடலை மீட்டு பிரேத ப‌ரிசோதனை‌க்காக திருத்துறைப்பூண்டி அரசு மரு‌த்துவமனை‌க்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தகவலறிந்த சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து, நேரில் சென்று அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். இவரது மனைவி கர்ப்பமாக உள்ள நிலையில் மின்சாரம் பாய்ந்து இளைஞர் இறந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 14 April 2022 4:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?