/* */

நன்னிலம் பகுதியில் மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை

நன்னிலம் பகுதியில் மழையால் சேதம் அடைந்த நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

நன்னிலம் பகுதியில் மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை
X

சேதம் அடைந்த நெற்பயிர்களை காட்டும் விவசாயிகள்.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே பத்தூர், ஆர்ப்பாவூர், திருக்களப்பூர், செல்லூர், இலையூர், கமுகக்குடி, கீழப்பாலூர், வளவநல்லூர் ஆகிய பகுதிகளில் சுமார் 1000 ஏக்கரில் பயிர் செய்யப்பட்ட சம்பா பயிர்கள் அழுகும் நிலையில் உள்ளது.மேலும், மழை நின்று இரண்டு நாட்களாகியும், மழைநீர் வடியாத நிலையில். தேங்கிய மழை நீரினால் சம்பா பயிர்கள் முளைக்கத் தொடங்கியுள்ளன.

நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த கன மழையினால் பாதிக்கப்பட்ட நெற் பயிர்களுக்கு அரசு அறிவித்த இழப்பீடுத்தொகையே இதுவரை வழங்கப்படாத நிலையில்

தற்பொழுது 10 நாட்களுக்குள் அறுவடை செய்ய தயாராக இருந்த நெற்பயிர்கள் மழை நீரினால் பாதிக்கப்பட்டதால் விவசாயிகள் பெருத்த நஷ்டம் அடைந்துள்ளனர்..

இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்... என அரசிடம் கோரிக்கை வைக்கின்றனர்...

மேலும், இது குறித்து பேசிய விவசாயிகள் பயிர் சேதங்களை முறையாக கணக்கெடுப்பு செய்து இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு விவசாயிகளுக்கு வழங்க வில்லை எனில் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் கூறினர்.

Updated On: 5 Jan 2022 10:23 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்