/* */

திருவாரூர் அருகே வியாபாரிகளின் நெல் மூட்டைகளை சிறைப்பிடித்த விவசாயிகள்

திருவாரூர் அருகே வியாபாரிகளின் நெல் மூட்டைகளை சிறைப்பிடித்த விவசாயிகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

திருவாரூர் அருகே வியாபாரிகளின் நெல் மூட்டைகளை சிறைப்பிடித்த விவசாயிகள்
X

நெல் மூட்டைகள் ஏற்றி வந்த லாரியை விவசாயிகள் சிறை பிடித்தனர்.

திருவாரூர் அருகே குடவாசலில் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள வியாபாரிகளின் நெல் மூட்டைகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனைக்கு வந்ததால் அதனை விவசாயிகள் சிறைப்பிடித்தனர்.

தொடர்ந்து விவசாயிகளின் புகார் அடிப்படையில் குடவாசல் காவல்துறை உதவியோடு வருவாய்த்துறையினர் 300 நெல் மூட்டைகள் அடுக்கியிருந்த லாரியையும் வெளிமாநிலம், மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்டு சேமித்து வைக்கப்பட்ட குடோனையும் கண்டுபிடித்து அந்த குடோனில் 4 முதல் 5 லாரிகளில் ஏற்றும் அளவிற்கு மேல் நெல்குவியல் குவியலாக இருந்தது.

வருவாய் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை திருவாரூர் மாவட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான குடவாசலில் அமைந்துள்ள கிடங்கிற்கு எடுத்து செல்லப்பட்டது . மேலும் இதுகுறித்து வருவாய்த் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 21 Jan 2022 2:21 PM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?