/* */

நன்னிலம் அரசு மருத்துவமனையில் காதுகேளாதோருக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அரசு மருத்துவமனையில் காதுகேளாதோருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

HIGHLIGHTS

நன்னிலம் அரசு மருத்துவமனையில் காதுகேளாதோருக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
X
நன்னிலம் அரசு மருத்துவமனையில் நோயாளி ஒருவருக்கு  பரிசோதனை நடத்தப்பட்டது.

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அரசு மருத்துவமனையில் காதுகேளாதோர் விழிப்புணர்வு முகாம் பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த முகாமில், காதுகேளாமையால் உண்டாகும் பாதிப்புகள் குறித்து பிறரோடு உரையாடல் இயலாமல் போவது, தகவல்தொடர்பு தடைபடும் சமூக மற்றும் உணர்வு தாக்கம் போன்றவற்றையும், அதிக ஒலியில் இசை கேட்டல் அல்லது தொலைக்காட்சி பார்த்தால் காது கேளாமை ஏற்படும் என்பதைப் பற்றியும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் எடுத்துரைத்தனர். அதனைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு பரிசோதனை செய்து துண்டு பிரசுரம் வழங்கினர்.

மேலும், அரசு மருத்துவமனைகளில் முதலமைச்சர் காப்பீட்டு திட்டம் மூலம் இலவசமாக காது கேட்கும் கருவியைப் பொருத்திக் கொள்ளலாம் என மருத்துவர்கள் கூறினர்.

இந்நிகழ்வில் தலைமை மருத்துவர் வினோத்குமார், காது நல மருத்துவர் பிரதீபா மற்றும் ரோட்டரி சங்க பொறுப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Updated On: 25 Sep 2021 1:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  4. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  6. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  7. வேலைவாய்ப்பு
    10ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு
  8. இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
  9. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதும்...
  10. தமிழ்நாடு
    முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நல உதவித் திட்டம் பற்றித் தெரியுமா?