/* */

பிரசவத்திற்காக சென்ற பெண்ணுக்கு ஆம்புலன்சில் குழந்தை பிறந்தது

மன்னார்குடி அருகே 108 ஆம்புலன்சில் பிரசவத்திற்காக சென்ற பெண்ணுக்கு ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே பெண் குழந்தை பிறந்தது.

HIGHLIGHTS

பிரசவத்திற்காக  சென்ற பெண்ணுக்கு ஆம்புலன்சில் குழந்தை பிறந்தது
X
ஆம்புலன்சில் பிறந்த குழந்தையுடன் தாய் மற்றும் மருத்துவ உதவியாளர்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை அடுத்த முன்னவால்கோட்டை பகுதியை சேர்ந்தவர் விவசாயி மாதவன். இவரது மனைவி திவ்யா (23) 9 மாத கர்ப்பினியாக இருந்த நிலையில் திடீரென பிரசவவலி ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை வரவழைத்து மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனை செல்லும் வழியில் காளாஞ்சிமேடு என்ற பகுதி அருகே திவ்யாவிற்கு பிரசவவலி அதிகரித்து துடிதுடித்துள்ளார்.

அப்போது திடீரென ஆம்புலன்ஸ் வாகனத்தை அதன் ஓட்டுநர் நிறுத்திட ஆம்புலன்ஸ் வாகனத்தில் இருந்து மருத்துவ உதவியாளர் முரளி பிரசவம் பார்த்தார். அதில் திவ்யாவிற்கு அழகிய பெண் குழந்தை பிறந்து குவாகுவா என கத்தியது. பின்னர் தாயும், சேயும் மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நலமாக உள்ள நிலையில் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் குழந்தை பிறந்த சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பிரசவம் பார்த்த 108 உதவியாளருக்கு மருத்துவமனை மருத்துவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Updated On: 27 April 2022 5:01 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  2. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  3. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  4. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  5. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  6. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  7. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  8. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  9. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  10. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய