/* */

விநாயகர் சிலைகளின் வழிபாடு: எஸ்.பி.,யிடம் சிவசேனா முறையீடு

வரும் விநாயகர் சதுர்த்தி அன்று 250 சிலைகளை வைத்து வழிபட அனுமதிக்க வேண்டும் என தேனி மாவட்ட சிவசேனா கட்சி அனுமதி கேட்டுள்ளது.

HIGHLIGHTS

விநாயகர் சிலைகளின் வழிபாடு: எஸ்.பி.,யிடம் சிவசேனா முறையீடு
X

தேனி எஸ்.பி.,யிடம் மனு கொடுத்த சிவசேனா நிர்வாகிகள்.

சிவசேனா கட்சியின் மாநில பொறுப்பாளர் குருஐயப்பன், மாவட்ட தலைவர் கருப்பையா, மாவட்ட செயலாளர் செழியன், மாவட்ட பொருளாளர் கணேசன், இளைஞர் அணி மாவட்ட தலைவர் கார்த்திக், மாவட்ட இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன் உட்பட அக்கட்சியினர் தேனி எஸ்.பி., பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், வரும் ஜூலை 31ம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று தேனி மற்றும் சுற்றுப்பகுதிகளில் 250 இடங்களில் விநாயகர் சிலைகளை அமைத்து, வழிபட உள்ளோம். ஆகஸ்ட் 2ம் தேதி தேனி பொம்மையகவுண்டன்பட்டியில் இருந்து விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்ல உள்ளோம். இதற்கு தேவையான பாதுகாப்பும், அனுமதியும் வழங்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

Updated On: 4 Jun 2022 7:39 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...