/* */

மூணாறு- கொடைக்கானல் பகுதிகள் சாலை மூலம் தரை வழியாக இணைக்கப்படுமா?

Kodaikanal Munnar Road - மூணாறையும், கொடைக்கானலையும் தரைவழியாக இணைக்க வேண்டும் என்பது வட்டவடை, கோவிலூர், கொட்டகம்பூர் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

HIGHLIGHTS

மூணாறு- கொடைக்கானல் பகுதிகள் சாலை மூலம்  தரை வழியாக இணைக்கப்படுமா?
X

இயற்கை எழில் சூழ்ந்த மூணாறு பகுதி.

Kodaikanal Munnar Road -மூணாறையும் கொடைக்கானலையும் தரைவழியாக இணைக்க வேண்டும் என்பது வட்டவடை, கோவிலூர், கொட்டகம்பூரில் வாழும் தமிழர்களின் 75 ஆண்டுகால கனவு.இந்த ரோடு கொடைக்கானல் வழியாக பூம்பாறை, மன்னவனூர், பூண்டி, கிளாவரை வழியாக செல்கிறது. அங்கிருந்து 11 கிலோமீட்டர் குதிரையில் பயணித்து, டாப் ஸ்டேஷனை அடைய வேண்டும்.தொடர்ந்து எல்லப்பட்டி, மாட்டுப்பட்டி, குண்டல, கிராம்ஸ்லேண்ட் வழியாக மூணாறை அடைகிறது. இந்த ரோட்டின் பெயர் எஸ்கேப் ரோடு.

இந்தப் பாதை உருவாவதற்கு முன்னாலேயே, வட்ட வடை, கோவிலூர், கொட்டக்கம்பூர் உள்ளிட்ட 28 மலை கிராமங்களில் வாழ்ந்த தமிழ் விவசாயிகள், தங்கள் விளைபொருட்களை குதிரை மற்றும் கழுதைகளில் ஏற்றிக்கொண்டு, கொடைக்கானலுக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள்.

இந்த ரோடு தற்போது வரை பயன்பாட்டிலேயே இருந்து வந்திருக்கிறது. ஆனால் 1956 மொழிவழிப் பிரிவினை துரதிஷ்டவசமாக வட்டவடை, கோவிலூரை கேரளாவோடு இணைத்து விட்டனர். கேரள அரசு, கடந்த 2003 ஆம் ஆண்டு எஸ்கேப் ரோட்டை மறித்து ,அதை பாம்பாடும் சோலை தேசிய பூங்காவாக அறிவித்தது. முன்பு இருதரப்பு பயணத்திற்கு ஓரளவு முட்டுக்கட்டை போட்ட கேரள மாநில அரசு,இப்போது டாப் ஸ்டேஷன் தாண்டியதும் கிளாவரை வரை சென்று தமிழகத்தை இணைக்கும் எஸ்கேப் ரோட்டில் சங்கிலியைப் போட்டு இழுத்துப் பூட்டியது.

ஜீப்களில் இந்த ரோட்டில் பயணித்து வந்த தமிழர்கள், இப்போது கேரள மாநில வனத் துறையால் கடும் அவதியை சந்தித்து வருகிறார்கள். வெறும் 11 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த ரோட்டை இழுத்துப்பூட்டியதன் மூலம், மிகப்பெரிய பொருளாதார தாக்குதலை வட்ட வடை கோவிலூர் உள்ளிட்ட 28 மலை கிராமங்களில் வாழும் தமிழர்கள் மீது திணித்திருக்கிறது கேரள மாநில அரசு.

விரைவில் இந்த சாலையை திறக்க வேண்டும் என்று இந்த 28 கிராம தமிழர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கையின் நியாயத்தை புரிந்து போராடியாவது இந்த ரோட்டை அமைக்க முயற்சிப்போம் என பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் மலைக்கிராம மக்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 17 Aug 2022 9:43 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  2. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  3. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  4. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  5. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  6. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  7. நாமக்கல்
    டாஸ்மாக் ஊழியர்களை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களைப் பிடிக்க 6...
  8. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  9. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  10. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு