Begin typing your search above and press return to search.
பெரியாறு பாசன விவசாய பிரதிநிதிகளை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசுவாரா?
Mullaperiyar Dam Issue - ஸ்டாலின் கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்திப்பதற்கு முன் பெரியாறு பாசன விவசாய பிரதிநிதிகளை சந்திக்கவேண்டும் என கோரிக்கை உள்ளது.
HIGHLIGHTS
Mullaperiyar Dam Issue -மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் தென்மாநில முதல்வர்கள் பங்கேற்கும் தென் மண்டல கவுன்சில் கூட்டம் நாளை திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் முதல்வர்கள் ஸ்டாலின், பினராயி விஜயன் உட்பட பலரும் பங்கேற்கின்றனர். அப்போது ஸ்டாலினும், பினராயி விஜயனும் தமிழக- கேரள நதிநீர் விவகாரங்கள் குறித்து பேச ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தையின் போது, பெரியாறு பாசன பகுதியில் உள்ள விவசாயிகளின் பிரதிநிதிகளுடன் முதல்வர் சந்தித்து, விவசாயிகளின் கருத்தையும் தெரிந்து கொண்டு கேரள முதல்வரிடம் பேசினால், மிகவும் சிறப்பாக பேச்சு அமைய வாய்ப்புகள் உள்ளது என விவசாய சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2