/* */

இன்று விறுவிறுப்பாக நடைபெறும் வியாபாரம் எது தெரியுமா? கொடுமைங்க..! (Exclusive)

தமிழக அளவில் தண்ணீர் வியாபாரமே இன்று இதர வியாபாரங்களை விட முன்னணியில் உள்ளது.

HIGHLIGHTS

இன்று விறுவிறுப்பாக நடைபெறும்  வியாபாரம் எது தெரியுமா? கொடுமைங்க..! (Exclusive)
X

தேனியில் உள்ள பத்ரகாளியம்மன் கோயில் திருமண மண்டபத்தில் குடிநீர் கேன்களை  இறக்கும் வியாபாரிகள்.

வீடுகள், கடைகள், வணிக நிறுவனங்கள், பொது இடங்கள், சினிமா திரையரங்குகள், மருத்துவமனைகள், சுற்றுலா தளங்கள், கோயில் விழாக்கள், விழா திடல்கள், கோயில்கள், ஓட்டல்கள், திருமண மண்டபங்கள், விசேஷ நிகழ்ச்சிகள் என எங்கு சென்றாலும் நிறைந்திருக்கும் ஒரு விஷயம் தண்ணீர் பாட்டில்கள். 300 மி.லி., 500 மி.லி., ஒரு லிட்டர்., 2 லிட்டர்., 20 லிட்டர் என பல்வேறு வடிவங்களில் தண்ணீ்ர் கேன்கள் விற்கப்படுகின்றன.

குடிநீர் இப்படி ஒரு வணிக பொருளாக மாறும் என சில ஆண்டுகளுக்கு முன்பு வரை யாராலும் கணித்திருக்கவே முடியாது. அந்த அளவு தற்போது குடிநீர் வியாபாரம் சக்கை போடு போடுகிறது. பாகுபாடு இன்றி அனைத்து இடங்களிலும் குடியிருப்பு பகுதிகளில் தெருத்தெருவிற்கு குடிநீர் கேன் விநியோகிக்கும் கடைகளும், விநியோகஸ்தர்களும் உள்ளனர். இவர்களே எந்த விசேஷ நிகழ்ச்சிகளாக இருந்தாலும் குடிநீர் கேன் ஆர்டர் எடுக்கின்றனர். சரியான நேரத்திற்கு சப்ளை செய்கின்றனர்.

பெருமாநகராட்சி, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சி என அத்தனை உள்ளாட்சி அமைப்புகளும் குடிநீர் விநியோகம் செய்தாலும், மக்கள் கேன்களை வாங்க காரணம் என்ன? உள்ளாட்சிகள் விநியோகம் செய்யும் தண்ணீரில் நம்பகத்தன்மை இல்லை. பல உள்ளாட்சிகளில் பல அல்ல... மிகப்பெரும்பாலான உள்ளாட்சிகளில் குடிநீர் முறையாக விநியோகிக்கப்படுவதில்லை. விநியோகிக்கப்பட்டாலும், கழிவுநீர் கலந்தே வருகிறது என அடுக்கடுக்காக உள்ளாட்சி குடிநீர் மீது புகார்கள் உள்ளன.

உள்ளாட்சி நிர்வாகங்கள், குடிநீர் வடிகால் வாரியம் செய்யும் குடிநீர் மீது மக்களுக்கு எப்போது நம்பிக்கை வருகிறதோ அப்போது தான் குடிநீர் கேன்களின் விற்பனை சற்று கட்டுப்பாட்டுக்குள் வரும். அதுவரை குறைந்த முதலீடு, அதிக லாபம் என்ற இலக்கில் தற்போது முந்திச் செல்லும் ஒரே தொழில் குடிநீர் பாட்டில் வியாபாரம் மட்டுமே என வியாபாரிகளே தெரிவித்தனர்.

Updated On: 25 May 2022 10:39 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்