/* */

பெரியகுளம் கண்மாயில் நீரை திறந்து விட்ட ஆக்கிரமிப்பாளர்கள்

பெரியகுளம் கண்மாயில் இருந்து ஆக்கிரமிப்பாளர்கள் நீரை திறந்து வீணாக வெளியேற்றி வருகின்றனர்.

HIGHLIGHTS

பெரியகுளம் கண்மாயில் நீரை திறந்து விட்ட ஆக்கிரமிப்பாளர்கள்
X

பெரியகுளம் கண்மாயில் திறக்கப்பட்ட தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது.

தேனி மாவட்டம், பெரியகுளம் கண்மாய் கடந்த சில மாதங்களாக பெய்த மழையால் நிரம்பி வழிகிறது. கண்மாய் நிரம்பியதால் அந்த கண்மாயின் நீர் தேக்கப்பரப்பினை ஆக்கிரமித்து, விவசாயம் செய்திருந்த நிலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் விவசாய பயிர்கள் அழுக தொடங்கி உள்ளன.

எனவே ஆக்கிரமிப்பாளர்கள் கண்மாயின் நீர் மட்டத்தை குறைக்கும் வகையில், அதிகாலையில் கண்மாயில் இருந்து நீரை திறந்து விட்டுள்ளனர். தாம்புமடையினை சேதப்படுத்தி தண்ணீரை திறந்து விட்டு வீணாக வெளியேற்றி வருகின்றனர். இந்த ஆக்கிரமிப்பாளர்களின் தொல்லை பல ஆண்டுகளாகவே உள்ளது. பொதுப்பணித்துறையால் ஆக்கிரமிப்பாளர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் கிடுக்குப்பிடி நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றி கண்மாய் நீரை பாதுகாக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Updated On: 23 Dec 2021 2:15 AM GMT

Related News

Latest News

  1. வந்தவாசி
    யோக நரசிம்ம பெருமாள் கோயிலில் சித்திரை மாத சுவாதி விழா
  2. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  3. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  4. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  5. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  6. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  7. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  8. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  9. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  10. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு