/* */

115 அடிக்கும் கீழே சரிந்த பெரியாறு அணை நீர் மட்டம்

பெரியாறு அணை நீர் மட்டம் 115 அடிக்கும் கீழே வந்ததால், முதல் போக நெல் சாகுபடி கேள்விக்குறியாகி உள்ளது.

HIGHLIGHTS

115 அடிக்கும் கீழே சரிந்த பெரியாறு அணை நீர் மட்டம்
X

பெரியாறு அணை பைல் படம்.

தேனி மாவட்டத்தில் கடந்த ஜூன் 1ம் தேதி முதல் போக நெல் சாகுபடிக்காக தண்ணீ்ர் திறக்கப்பட்டது. தேனி மாவட்டத்தில் உள்ள 14 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி செய்ய நாற்றாங்கால் விதைப்பு பணிகள் தொடங்கியது. தற்போது நாற்றங்கால் வளர்ந்து நெல் நாற்றுகள் நடவு பருவத்திற்கு வந்து விட்டன. பல இடங்களில் நாற்றுகள் முதிர்ந்த நாற்றுகளாக மாறி விட்டன.

ஆனால் பெரியாறு அணையில் மழை இல்லை. அணையின் நீர் மட்டம் இன்று மதியம் நிலவரப்படி 115 அடிக்கும் கீழே வந்து விட்டது. அணையில் இருந்து விநாடிக்கு 400 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணைக்கு விநாடிக்கு 96 கனஅடி தண்ணீர் மட்டுமே வருகிறது.

இதனால் அணையின் நீர் மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. தற்போதய நிலையில் அணையில் நாற்றங்கால் நடுவதற்கு தேவையான அளவு கூட தண்ணீர் இல்லை. அணைப்பகுதியில் மழை பெய்வதற்கான அறிகுறிகளும் இல்லை. இதனால் அணை நீர் மட்டம் உயர்வதற்கான வழிமுறைகளும் தெரியவில்லை.

மழை பெய்யாததால், அணையில் உள்ள தண்ணீரை குடிநீருக்கு பயன்படுத்த வேண்டிய நிலை வந்தாலும் வரும். அப்படிப்பட்ட ஒரு இக்கட்டான நிலை உருவானால் நெல் நடவுப்பணிகள் பாதிக்கப்படும். நாற்றங்கால் தயாரித்து உழவுப்பணிகள் முடித்த விவசாயிகளுக்கு இந்த நஷ்டம் ஏற்படும் அபாயகரமான நிலை உருவாகி உள்ளது.

Updated On: 2 July 2023 7:37 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  2. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  3. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!
  6. ஆன்மீகம்
    பூஜை அறையை எப்போதும் சுகந்தமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?
  7. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  8. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  9. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?