Begin typing your search above and press return to search.
கேரளாவிற்கு கஞ்சா கடத்திய இருவர் கைது: ஒருவருக்கு வலைவீச்சு
Ganja Crime - கேரளாவிற்கு கஞ்சா கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர். தப்பிய பெண் ஒருவரை தேடி வருகின்றனர்.
HIGHLIGHTS
Ganja Crime - கம்பம் குரங்குமாயன் தெருவை சேர்ந்தவர்கள் ராஜா, 28 மற்றும் ஜெயக்குமார், 29. இவர்கள் இப்பகுதியை சேர்ந்த லதா, 44 என்பவரின் உதவியுடன் ஆட்டோவில் கஞ்சா கடத்திக் கொண்டு கேரளா சென்றனர்.
கம்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே எஸ்.ஐ.,ஜெயப்பாண்டி தலைமையிலான போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது ஆட்டோவில் இருந்த 2 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர். ராஜா, ஜெயக்குமாரை கைது செய்தனர். ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர். இந்த சோதனை நடந்த போது லதா மட்டும் தப்பி ஓடி விட்டார். இவரை தேடி வருகின்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2