/* */

கோயிலுக்கு அழைத்துச் செல்வதாக கூறி ரூ.4 லட்சம் மோசடி செய்த இருவர் கைது

கோயிலுக்கு செல்வதாக கூறி பெண்களிடம் ரூ. 4 லட்சம் மோசடி செய்த 2 பேரை தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

கோயிலுக்கு அழைத்துச் செல்வதாக  கூறி ரூ.4 லட்சம் மோசடி செய்த இருவர் கைது
X

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பாப்பம்மாள்புரத்தை சேர்ந்த சந்திரசேகர் மனைவி பாரிஜாதம் (வயது 57.) ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்ட இவர், ஆன்மீக சுற்றுலா தளத்திற்கு செல்ல முடிவு செய்தார். கேத்தார்நாத், பத்ரிநாத் செல்ல இணையத்தில் வந்த நம்பரை தொடர்பு கொண்டுள்ளார். அவர்கள் ரயில் மூலம் அழைத்துச் செல்ல ஒரு பெட்டிக்கு 72 பேர் தேவை எனக்கூறி உள்ளனர். பாரிஜாதம் 90 நபர்களிடம் 4 லட்சத்து 800 ரூபாய் வசூல் செய்து கொடுத்துள்ளார். திரும்ப அவர்களிடம் இருந்து எந்த தொடர்பும் கிடைக்கவில்லை. இது குறித்து பாரிஜாதம் தேனி எஸ்.பி.,யிடம் புகார் செய்தார். தேனி சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில் பாரிஜாதத்திடம் பணத்தை ஏமாற்றியவர்கள் சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த ஹேமாமாலினி( 47,) மும்பை சான்பாஜி நகரை சேர்ந்த வெங்கட்ரமணன்,( 60 ) என தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

Updated On: 3 Aug 2022 4:33 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்