/* */

தேனி : கொரோனா நோய்த்தொற்றுக்கு மனைவி இறப்பு: கணவர் மாயம்

கொரோனாவால் மனைவி இறந்த நிலையில் காணாமல் போன கணவரை போலீஸார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

தேனி : கொரோனா நோய்த்தொற்றுக்கு மனைவி இறப்பு: கணவர் மாயம்
X

தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் அருகே கொரோனாவால் மனைவி இறந்த நிலையில் காணாமல் போன கணவரை போலீஸார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

போடி அருகே நாகலாபுரம் கெஞ்சம்பட்டியை சேர்ந்தவர் வைரவன் மகன் காளிராஜ் (36). இவர் மனைவியுடன் கேரளத்தில் கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில் மனைவிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. கேரள மாநிலம் உடுப்பன்சோலையிலிருந்து தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் 12.5.2021 ஆம் தேதி காளிராஜின் மனைவி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து அவரை தேனியில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்து விட்டு போடி விசுவாசபுரத்தில் உள்ள உறவினர் வீட்டில் காளிராஜ் தங்கியிருந்துள்ளார். ஒரு வாரத்திற்கு பின் வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் இதுகுறித்து காளிராஜின் தாயார் ராஜம்மாள் (57) போடி தாலுகா காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் தாலுகா போலீஸார் வழக்கு பதிவு செய்து காளிராஜை தேடி வருகின்றனர்.

Updated On: 13 Jun 2021 2:27 PM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?