Begin typing your search above and press return to search.
பெரியகுளம் அருகே கோயில் சிலை, உண்டியல் திருட்டு
கோயில் ஊழியர்களை கத்தியை காட்டி மிரட்டி சாவியை வாங்கி இரண்டு நடராஜர் வெண்கல சிலை, உண்டியலை திருடிச் சென்றனர்.
HIGHLIGHTS
தேனி-பெரியகுளம் ரோட்டோரம் அன்னஞ்சி கிராமத்தில் ஆதிநாராயணன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்குள் முகமூடி அறிந்த நபர்கள் நுழைந்து சி.சி.டி.வி., கேமராவை உடைத்தனர். கோயில் ஊழியர்களை கத்தியை காட்டி மிரட்டி சாவியை வாங்கி கோயிலை திறந்த இரண்டு நடராஜர் வெண்கல சிலைகள், உண்டியலை திருடிச் சென்றனர். ஊழியர்களின் மொபைலையும் திருடிச் சென்றனர். இதுகுறித்து அல்லிநகரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.