/* */

கூடலுாரில் சாக்கடையில் கிடந்த மருந்து மாத்திரைகள்: அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

கூடலுாரில் பொதுமக்களுக்கு பயன்பட வேண்டிய அரசு மருந்து மாத்திரைகள் சாக்கடையில் கண்டெடுக்கப்பட்டது

HIGHLIGHTS

கூடலுாரில்  சாக்கடையில் கிடந்த மருந்து மாத்திரைகள்: அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
X

கூடலூரில் சாக்கடையில் கொட்டப்பட்டிருந்த அரசு மருத்துவமனை மாத்திரைகள் 

தேனி மாவட்டம் கூடலூர் முதலாவது வார்டு மந்தை அம்மன் கோயில் தெரு, வடக்கு ரத வீதியில் உள்ள பெரிய சாக்கடையில் அரசு மருத்துவமனையில் வழங்கப்படும் விலை உயர்ந்த மாத்திரைகள், சிரிஞ்சுகள், மற்றும் குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் சத்து மாத்திரைகள் என பல்வேறு மருந்துகள் குவியல், குவியலாக போடப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் கேட்கும் போது, ஸ்டாக் இல்லை. வெளி மார்க்கெட்டில் வாங்கிக் கொள்ளுங்கள் எனக்கூறும் ஊழியர்கள், தற்போது அதனை கொண்டு வந்து சாக்கடையில் கொட்டி உள்ளனர்.

சாக்கடை துார்வார வந்த துப்புரவு பணியாளர்கள் சாக்கடைக்குள் கரண்டியை விட்டு அள்ளும் போது, மாத்திரைகள், மருந்துகள், டானிக்கைகள் வந்தன. இவற்றை வெளியில் குவித்த துப்புரவு பணியாளர்கள் ஒரு நாள் முழுக்க சாக்கடை நீர் வடிவதற்காக போட்டு வைத்திருந்தனர். பின்னர் சாக்கடை நீர் வடிந்த பின்னர் அள்ளிச் சென்று குப்பைக்கிடங்கிற்குள் போட்டனர்.

இந்த மாத்திரைகள், மருந்துகள் வெளியில் கிடந்த போது ஏராளமானோர் மொபைலில் பணம் எடுத்து சமூக வலைதளங்களில் பதி விட்டனர். இது குறித்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Updated On: 23 May 2023 5:21 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  2. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  3. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  4. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  5. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  6. திருப்பரங்குன்றம்
    ஆறுமுக மங்கலம் வெள்ளாளர் உறவின் முறை சங்க டிரஸ்ட் புதிய நிர்வாகிகள்...
  7. மாதவரம்
    சோழவரம் ஒன்றியத்தில் தண்ணீர் பந்தல் திறந்து வைத்த சுதர்சனம் எம்எல்ஏ
  8. திருவள்ளூர்
    தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் நாய்கள் கடித்ததில் படுகாயம்
  9. வீடியோ
    அப்பா அம்மா ரெண்டுபேருமே படிக்கல |உணர்ச்சிபொங்க சொன்ன மாணவி!உருகி...
  10. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்