Begin typing your search above and press return to search.
தேனி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண் நிர்வாண நிலையில் கொலை
தேனி மாவட்டம் கூடலுாரில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
HIGHLIGHTS
தேனி மாவட்டம் கூடலுார் குள்ளப்பகவுண்டன்பட்டி ரோட்டோரம் ஒரு ரேஷன் கடை அருகில் மயில் என்ற 50 வயது நிரம்பிய மனநலம் பாதிக்கப்பட்ட பெண் நிர்வாணமாக இறந்து கிடந்தார். அவரது உடலி்ல் காயங்கள் இருந்தன. அவர் நிர்வாணமாக்கப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு பின்னர் கொல்லப்பட்டிருக்கலாம் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எஸ்.பி., பிரவீன்உமேஷ் டோங்கரே தலைமையில் போலீசார் மோப்பநாயுடன் சென்று விசாரணை நடத்தினர்.