/* */

மீண்டும் மிரட்டும் ஒற்றை யானை: விவசாயிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை

தேவாரம், கோம்பை, ரெங்கனாதபுரம் பகுதி விவசாயிகள் இரவு நேரங்களில் தோட்டங்களில் தங்க வேண்டாம் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

HIGHLIGHTS

மீண்டும் மிரட்டும் ஒற்றை யானை: விவசாயிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை
X

கோப்பு படம்.

தேனி மாவட்டம், தேவாரம், கோம்பை வனப்பகுதிகளில் ஒற்றை யானை சுற்றி வருகிறது. இதுவரை இந்த யானை தாக்கியதில் 14 பேர் உயிரிழந்து உள்ளனர். பல நுாறு ஏக்கர் கரும்பு, தென்னை , மரவள்ளிக்கிழங்கு பயிர்களை தின்று அழித்துள்ளது. இந்த யானையினை வனத்துறையினர் மிகவும் சிரமப்பட்டு காட்டுக்குள் அனுப்பினர்.

இந்நிலையில் மீண்டும் ஒற்றை யானை விளைநிலங்களுக்குள் புகுந்துள்ளது. ரெங்கனாதபுரத்தை சேர்ந்த ஆசை என்பவரின் தோட்டத்திற்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி உள்ளது. இந்த யானை மீண்டும் விளைநிலங்களில் உலா வருவதால் விவசாயிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். எனவே விவசாயிகள் குறிப்பாக இரவி்ல் தோட்டங்களில் தங்க வேண்டாம் என வனத்துறை எச்சரித்துள்ளது. மீண்டும் இந்த ஒற்றை யானையினை வனத்திற்குள் விரட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Updated On: 16 Jun 2022 6:52 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு, மறுவாக்குப்பதிவு இல்லை: தேர்தல்...
  2. தென்காசி
    சீரான குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் : போக்குவரத்து...
  3. தொழில்நுட்பம்
    கையில் அடங்கும் புதிய அதிசயம் - Vivo V30e
  4. தொழில்நுட்பம்
    கலக்கும் Nothing Phone 2..! சூப்பர் அப்டேட் அப்பு..!
  5. பட்டுக்கோட்டை
    குறைந்த செலவில் பூச்சிக்கட்டுப்பாடு..! மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி..! ...
  6. ஈரோடு
    அந்தியூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து 10ம் வகுப்பு மாணவன்...
  7. தென்காசி
    மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து...
  8. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவில் அசத்திய மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள்..!
  9. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு - எஸ்பி...
  10. தொழில்நுட்பம்
    ரெட்மி நோட் 13க்கு ஹைப்பர்ஓஎஸ்!