/* */

சேது சமுத்திரக் கால்வாய் திட்டம்: சாதகமா? பாதகமா? ஓர் அலசல்...

சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தில் உள்ள சாதகம் மற்றும் பாதகம் குறித்து விவரங்களை இந்தக் கட்டுரையில் காண்போம்.

HIGHLIGHTS

சேது சமுத்திரக் கால்வாய் திட்டம்: சாதகமா? பாதகமா? ஓர் அலசல்...
X

சேது சமுத்திரக் கால்வாய் திட்டம் தொடங்கியபோது எடுக்கப்பட்ட படம்.

இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையே உள்ள பாக் ஜலசந்தியில் கால்வாய் அமைத்தால் அதன் மூலம் கப்பல்களின் நேரம், பணம் சேமிக்கப்படும். இதுவே சேது கால்வாய்த் திட்டம். இந்தத் திட்டத்தின் மூலம் தூத்துக்குடியை சுற்றியுள்ள இடங்களில் தொழில் பெருகும் என்பது மதிப்பீடு. இந்தத் திட்டம் நிறைவேற்றப்படும் என முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றி உள்ளார்.

இதன் மூலம் சேதுக்கால்வாய் திட்டம் உடனே நிறைவேறிவிடுமா? என்றால் அது நடக்க வாய்ப்பு இல்லை என்றே கூற முடியும். இந்தத் திட்டம் மூலம் குறைந்தது 10 விஷயங்கள் மூலம் கெடுதல்களை இந்தியா சந்திக்க நேரிடும் என கூறப்படுகிறது.

சாதகமற்ற விஷயங்கள் என்ன? என வரும்போது, பெரிய கப்பல் போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாது என தெரியவந்துள்ளது. அதாவது, கப்பல்களில் 37000 டன் வரை எடையுள்ள கப்பல்களை இந்த கால்வாயில் பயன்படுத்த முடியும். அதற்கு 12 மீட்டர் ஆழத்தில் தூர்வார வேண்டும். ஆனால் இன்று சரக்கு போக்குவரத்தில் பயன்படுத்தும் பெரும்பாலான கப்பல்களின் எடை 60,000 முதல் 2,20,000 டன்கள். அதில் அதிக பட்சம் 37,000 எடை கொண்ட Handysize, Handymax கப்பல்கள் மட்டுமே இதில் பயணிக்க வைக்க முடியும். அப்படிப்பட்ட சிறிய கப்பல்களால் இன்று செலவுகள் அதிகரிப்பதால் அவை பயன்பாட்டில் இருந்து குறைந்து கொண்டே வருகிறது. எனவே இந்த கால்வாய் வருங்காலத்தில் பயனற்று போகும்.

இதன் மூலம் 1:45 மணி நேரம் மட்டுமே சேமிக்க முடியும், ஆனால் முடியாது. ஏனென்றால், இந்த கால்வாய் இல்லாததால் இலங்கையை சுற்றிவர 1227 கடல் மைல் தொலைவாக இருக்கும் பயணம், இது வந்தால் 1098 கடல் மைலாக குறையும். அதாவது வெறும் 129 கடல் மைல் மட்டுமே சேமிக்க முடியும். ஆனால் அதனை மூலம் நேரம் அல்லது பணமோ சேமிக்க முடியாது.

ஏனென்றால் பொதுவாக 12 கடல் மைல் வேகத்தில் திறந்த கடலில் செல்லும் கப்பல்கள், இந்த குறுகிய கால்வாயில் 6 கடல் மைல் வேகத்தில்தான் போக முடியும். அது மட்டுமல்ல இந்த கால்வாயை கடந்து செல்ல பைலட்டுகள் மாற வேண்டும் என்பதால் அதில் ஏற்படும் கால தாமதம் அதனால் வரும் பயண நேரத்தை சேமிக்க முடியாது என்பதை விட கூடுதல் நேரம் ஏற்படும்.

இந்த கால்வாய் பயன்படுத்தினால் 19 லட்ச ரூபாய் அதிகமாக ஒரு கப்பல் செலவிட வேண்டும். இந்த கப்பலின் வேகம் குறைவதால் அதிக எரிபொருள் தேவைப்படும். பைலட்டுகளுக்கும், கால்வாய்க்கும் பணம் கட்ட வேண்டும். அதனால் ஒரு சிறு கப்பல் பயணம் செய்ய குறைந்தது 19 லட்ச ரூபாய் அதிகம் செலவு செய்ய வேண்டும். இந்த திட்டத்திற்கு செய்த முதலீட்டை 25 வருடங்கள் ஆனாலும் எடுக்க முடியாது.

இந்த திட்டதை முடிக்க 2400 கோடி செலவு செய்ய வேண்டும். இந்த முதலீட்டை வருமானத்தின் மூலம் திரும்ப எடுக்க குறைந்தது 25 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். இதற்கான பராமரிப்பு செல்வுகள் ஒரு தொடர்கதை என்பதால் அதுகூட சாத்தியா என்பது கேள்விக்குறியே? இந்த பகுதியில் ஷேலோ வாட்டரும், நீரோட்டமும் இருப்பதால் தொடர்ந்து தூர் வாரிக்கொண்டே இருக்க வேண்டும்.

இங்கு மணல் மேடுகள் இருப்பதால், வாட்டர் கரண்ட் மூலம் ஆழப்படுத்தினாலும் மணல் மீண்டும் நிரம்பிவிடும். எனவே தொடர்ந்து அதை தூர்வாரிக்கொண்டே இருக்க செலவு செய்து கொண்டே இருக்க வேண்டும். மீன் மற்றும் உயிரினங்கள் அழிவு ஏற்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். இந்த திட்டத்திற்காக தூர்வாரப்படுவதால் அங்கே இருக்கும் மீன், கடல்பாசி, முத்து போன்ற உயிரினஙகள் பாதிக்கப்படுவதால் சுற்று சூழல் பெரிய அளவில் பாதிக்கப்படும்.

மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். மீன்வளம் குறைவதாலும், கப்பல் போக்குவரத்தினாலும் இந்திய ஸ்ரீலங்கா தமிழ் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். நாட்டின் பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்படும். இது பொது சரக்கு வழி பாதையாக மாறும்போது அமெரிக்க, பாகிஸ்தான், சீன, உலக நாடுகளின் உளவு கப்பல்கள் கூட வர வாய்ப்பு இருப்பதால் இதுவரை பாதுகாப்பாக இருந்த அந்த பகுதி திறந்த வெளியாக மாறி பாதுகாப்பு குறையும் என்பதால் நாம் பாதுகாப்பு கருதி அதிக ரோந்து செய்ய வேண்டி வரும். அதனால் கப்பற்படைக்கு கூடுதல் செலவு மட்டுமல்ல பாதுகாப்பு குறைவும் ஏற்படும்.

ராமர் சேது பாலத்தில் அறிய வகை உயிரினங்கள் அழிய நேரிடும். அங்கே இருக்கும் ராமர் பாலத்தில் பல அறிய வகை உயிரினங்கள் இருக்கிறது. அவை அழிந்து விடும். அதன் விளைவு என்ன என்பது இப்போது தெரியாது. இது திறந்த கடல்வெளியில் பயணம் செய்வது போல பாதுகாப்பாக பயணம் செய்ய முடியாது. மேலும் புயல் காலங்களில் ஆபத்தை விளைவிக்கவும், கப்பல் கரை தட்டவும் வாய்ப்புகள் அதிகம். அப்படி நடந்தால் கப்பலை மீட்பது இயலாது போய்விடும் என்பது பெரிய ரிஸ்க்.

இது தவிர ராமர் சேது பாலம் அழிந்தால் தேசிய நினைவு சின்னம் அழியும். நம் மூதாதையர்களின் அடையாளங்கள் மறையும். அதை மறைக்கத்தான் ராமர் பாலம் என்று சொல்லாமல் ஆதாம் பாலம் என்று கூறி வருகின்றனர். இது அழிந்தால் நாளை தொல்பொருள் ஆராய்ச்சி செய்ய முடியாது.

இன்னொரு முக்கிய விஷயம் போதை பொருட்கள் கடத்துவது எளிதாகும். இந்த திட்டம் வந்தால் தமிழகம் ஜப்பான் ஆகும் என்றால், துறைமுகம் உள்ள நாகப்பட்டினம், கடலூர் எல்லாம் 50 ஆண்டுகளாக ஏன் வளரவில்லை?

இந்த திட்டத்திற்கு பதிலாக கவனிப்பபார் அற்று கிடக்கும் தூத்துக்குடி, நாகபட்டினம் துறைமுகத்தை மேம்படுத்தினால் தொழில்வளம் பெருகும். குளச்சல் துறைமுகத்தை கண்டெய்னர் ஹப் ஆக மாற்றினால், அது இதைவிட பல மடங்கு தொழில் அபிவிருத்தியை தென்தமிழகம் மட்டுமல்ல கேரளவிலும் ஏற்படுத்த முடியும். ஆனால் அது சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹம்பந்தோட்டா துறைமுகத்தின் தேவையை நீர்த்துப்போக செய்துவிடும் என்பதால், சீனா இங்குள்ள சிலருக்கு பணம் கொடுத்து பேராட்டம் செய்து அதை சீனா தடுத்து வருகிறது.

ஆனால் இந்தத் திட்டம் மத்திய அரசின் அனுமதி இல்லாமல் ஒருபோதும் நிறைவேற்றப்பட முடியாது. இதன் மூலம் பாஜகவிற்கு எதிராக வரும் தேர்தலில் ஒரு மைலேஜ் செய்ய மட்டுமே முடியும் என்பது திமுகவின் கணக்கு.

Updated On: 21 Jan 2023 6:27 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வீடியோ
    Mamtha-வை கலங்கடித்த வீரமங்கை! யார் இந்த Rekha Patra? #SandeshKali...
  3. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மே தின விழா கொண்டாட்டம்
  5. குமாரபாளையம்
    குரு பெயர்ச்சி யாக பூஜை வழிபாடு
  6. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  7. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  8. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  9. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  10. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...