/* */

ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக ரூ.23 லட்சம் மோசடி: இருவர் மீது வழக்கு

ஆசிரியர் வேலை வாங்கித்தருவதாக கூறி, 23 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக இருவர் மீது தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

HIGHLIGHTS

ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக ரூ.23 லட்சம் மோசடி: இருவர் மீது வழக்கு
X

பைல் படம்.

ஆசிரியர் வேலை வாங்கித்தருவதாக கூறி, 23 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக இருவர் மீது தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பெரியகுளம் பழைய சந்தை ரோட்டை சேர்ந்தவர் ராமாயியம்மாள் 62. இவர் கல்வித்தறையில் கண்காணிப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். திண்டுக்கல் நாகல்நகரை சேர்ந்தவர் மாரியம்மாள். இவர் வத்தலக்குண்டு வட்டார கல்வி அலுவலகத்தில் நேர்முக உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி காமராஜ்நகரை சேர்ந்த செல்வத்தின் மகன் ராஜா, மருமகள் சோனியாகாந்திக்கு ஆசிரியர் வேலை வாங்கித்தருவதாக கூறி 23 லட்சம் ரூபாய் வாங்கி உள்ளனர். வேலையும் வாங்கித்தரவில்லை. பணத்தையும் திரும்பத்தரவில்லை. இது குறித்து செல்வம் கொடுத்த புகாரில், தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், ராமாயியம்மாள், மாரியம்மாள் ஆகியோர் மீது மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Updated On: 3 Jun 2022 4:21 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  2. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  3. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  4. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. ஆன்மீகம்
    இறை நம்பிக்கை பற்றி உலக மதங்களின் பொன்மொழிகள்
  7. இந்தியா
    எலோன் மஸ்க்கின் இந்தியா வருகை ஒத்திவைப்பு! ஆதாரங்கள்
  8. ஆன்மீகம்
    பொறுமை! நம்பிக்கை: இது சீரடி சாய்பாபாவின் அருள்மொழிகள்
  9. லைஃப்ஸ்டைல்
    நீண்ட ஆயுளை தரும் 15 காய்கறிகள், பழங்கள்
  10. ஈரோடு
    ஈரோட்டில் ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெசின் பழுது நீக்க இலவசப் பயிற்சி:...