Begin typing your search above and press return to search.
திருமணம் ஆகாத கர்ப்பிணி மர்ம மரணம்: போலீஸார் விசாரணை
தேனி அருகே கொடுவிலார்பட்டியில் திருமணம் ஆகாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்
HIGHLIGHTS
தேனி அருகே கொடுவிலார்பட்டியை சேர்ந்த திருமணம் ஆகாத கர்ப்பிணி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.
தேனி அருகே கொடுவிலார்பட்டியை சேர்ந்த திருமணம் ஆகாத 20 வயது இளம் பெண் (போலீசார் அறிவுறுத்தல்படி பெயர் மறைக்கப்பட்டுள்ளது) கர்ப்பமாக இருந்தார். குடும்பத்தினர் அவரது கர்ப்பத்திற்கு காரணம் கேட்டனர். நாளை காலை அனைவரிடமும் சொல்கிறேன் என வீட்டாரிடம் கூறியிருந்தார். திடீரென நள்ளிரவி்ல் வாயில் நுரை தள்ளி, ஆபத்தான நிலையிவ் இருந்தார். இவர் தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக கொடுவிலார்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.