/* */

கோடை உழவு செய்யுங்கள்...விவசாயிகளுக்கு அறிவுரை

தற்போது பெய்து வரும் கோடை மழையை பயன்படுத்தி கோடை உழவு செய்யுங்கள் என விவசாயிகளுக்கு வேளாண்மைத்துறை அறிவுறுத்தி உள்ளது.

HIGHLIGHTS

கோடை உழவு செய்யுங்கள்...விவசாயிகளுக்கு அறிவுரை
X

பைல் படம்.

இதுகுறித்து தேனி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அழகுநாகேந்திரன் கூறியதாவது:

தற்போது தேனி மாவட்டத்தில் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. இந்த மழையை பயன்படுத்தி விவசாயிகள் கோடை உழவு செய்ய வேண்டும். மண்ணை உழவு செய்யும் போது முதலில் சூடாகி பின்னர் குளிர வேண்டும். இது தான் மண்ணை பக்குவப்படுத்தும் தத்துவம். இதற்கு கோடை உழவு சிறந்தது.

கோடை உழவுக்கு சட்டிக்கலப்பை பயன்படுத்துவது நல்லது. இதன் மூலம் இதன் மூலம் மண்ணி்ல் மறைந்திருக்கும் தீமை தரும் பூச்சிகள், கூண்டுப்புழுக்களை அழித்து விடலாம். மண் வளத்தை பாதிக்கும் களைச்செடிகளையும் அதன் விதைகளையும் அழித்து விடலாம். இப்போது பெய்யும் மழைநீர், வளிமண்டலத்தில் நிறைந்துள்ள நைட்ரேட் என்ற வேதிப்பொருளுடன் இணைந்து மண்ணில் கலந்து தழைச்சத்தினை அதிகரிக்க செய்யும்.

பொதுவாக வளிமண்டலத்தில் நைட்ரஜன், ஆக்ஸிஜன், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் அதிகம் இருக்கும். நீண்ட காலத்திற்கு பிறகு பெய்யும் கோடை மழையில் அந்த சத்துக்கள் மண்ணிற்கு வந்து சேரும். உழவு செய்து தயாராக வைத்திருந்தால், அந்த சத்துக்களை மண் எளிதில் கிரகித்துக் கொள்ளும். இதனால் நிலம் வளமாகும். விதைகள் முளைத்து நல்ல மகசூல் கிடைக்கும். இவ்வாறு கூறியுள்ளார்.

Updated On: 10 May 2022 2:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?