/* */

தேனிமாவட்டம்: பழங்குடியின மக்களுக்கு வன விளை பொருட்களை விற்பனை செய்ய பயிற்சி

தேனி மாவட்டத்தில் பழங்குடியின மக்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன

HIGHLIGHTS

தேனிமாவட்டம்: பழங்குடியின மக்களுக்கு வன விளை பொருட்களை விற்பனை செய்ய பயிற்சி
X

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே செல்லான்காலனி ஆதிவாசியின மக்களின் வீட்டில் கலெக்டர் முரளிதரன்

தேனி மாவட்டத்தில் 3 லட்சம் ஏக்கருக்கும் அதிக பரப்பில் அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளன. இந்த வனத்திற்குள் 19 ஆதிவாசி கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் 485 ஆதிவாசி பெண்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு வன விளை பொருட்களை சேகரித்தல், பதப்படுத்துதல், விற்பனை செய்தல் குறித்த பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இது குறித்து, கலெக்டர் முரளிதரன் கூறியதாவது: ஆதிவாசியின மக்கள் வனங்களில் விளையும் கடுக்காய், நெல்லி போன்ற பல பொருட்களை சேகரிக்கின்றனர். குறிப்பாக தேன் அதிகளவில் சேகரிக்கின்றனர். இவற்றை பதப்படுத்தி, விற்பனை செய்ய பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. பயிற்சி பெற்ற மகளிர்க்கு வங்கி கடன் உதவி வழங்கப்படுகிறது. இந்த மக்களுக்கு ஆண்டுக்கு மூன்று மாதங்கள் மட்டுமே பொருட்களை சேகரிக்கும் வேலை கிடைக்கிறது.

மீதம் உள்ள நாட்களில் இவர்கள் விவசாயம் செய்து பிழைக்க வசதியாக பல்வேறு வகையான விதைகள் வழங்கப்பட்டு வருகின்றன. தவிர அத்தனை பழங்குடியின கிராமங்களிலும் அரசு திட்டங்கள் சென்றடையும் வகையில் சிறப்பு முகாம்கள் நடத்தவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதன் மூலம் பழங்குடியின மக்களின் வாழ்க்கை தரம் உயரும் என்றார் அவர்.

Updated On: 22 Sep 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்