/* */

பெரியகுளத்தில் சுற்றித்திரியும் மனநாேயாளிகள்: நடவடிக்கைக்கு பாெதுமக்கள் காேரிக்கை

பெரியகுளத்தில் மனநோய் பாதிக்கப்பட்டவர்களால் பொதுமக்களுக்கு பெரும் ்இடையூறு ஏற்பட்டு வருகிறது.

HIGHLIGHTS

பெரியகுளத்தில் சுற்றித்திரியும் மனநாேயாளிகள்: நடவடிக்கைக்கு பாெதுமக்கள் காேரிக்கை
X

பெரியகுளத்தில் சுற்றித்திரியும் மனநோயாளிகள்.

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் மனநோயாளிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இவர்கள் பொதுமக்கள், பெண்களுக்கு பெரும் தொல்லையாக மாறி வருகின்றனர். ரோட்டில் செல்லும் பெண்களின் மீது உரசுவது போல் மிக நெருக்கமாக வந்து நடிக்கின்றனர். அப்போது பெண்கள் அறுவெறுப்புடன் அலறி ஓதுங்குகின்றனர். ஆண்கள் டீக்கடைகளில் வடை சாப்பிட்டால் உடனே வந்து கையேந்துகின்றனர். தர மறுத்தால் பறித்து விடுகின்றனர்.

சில நேரங்களில் பர்சுகளை திருடிக் கொண்டு ஓடுகின்றனர். ரோட்டில் மிகவும் அநாகரீகமாக நடந்து கொள்கின்றனர். இவ்வளவுக்கும் பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மனநோய் மருத்துவ சிகிச்சை பிரிவு செயல்படுகிறது. இங்குள்ள டாக்டர்கள் முறையாக பணிக்கு வருவதில்லை. இவர்களின் வேலையே ரோட்டில் சுற்றித்திரியும் மனநோயாளிகளை பிடித்து, சிகிச்சை அளித்து குணப்படுத்தி அனுப்புவது தான்.

ஆனால் இந்த வேலையை இவர்கள் முறையாக செய்யாததால், பெண்கள் பெரும் துன்பத்திற்கு உள்ளாகின்றனர் என பொதுமக்கள் புகார் எழுப்பி வருகின்றனர். தேனி மாவட்ட கலெக்டர் முரளீதரன் இந்த விஷயத்தில் நேரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் விரும்புகின்றனர்.

Updated On: 16 Oct 2021 7:13 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?