/* */

மருந்து கடை உரிமையாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம்

மருந்து கடை உரிமையாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம்
X

மருந்து கடை உரிமையாளர்களுடன் காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம்.

தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரபகுதிகளில் செயல்பட்டு வரும் மருந்துக் கடை உரிமையாளர்களுடன் பெரியகுளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் பெரியகுளம் காவல் நிலையத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் பெரியகுளம் உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் முத்துக்குமார் பேசியதாவது: கொரோனா இரண்டாவது அலையின் தாக்கத்தால் அதிக அளவில் உயிர் சேதம் ஏற்பட்டு வருகின்றது. காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. இருப்பினும் பொதுமக்கள் பலரும் கொரோனா தொற்றுக்கு உரிய சிகிச்சை பெறாமல் வீட்டில் இருந்தவாரே ஏதேனும் மருந்துக் கடையில் இருமல், காய்ச்சல், ஜலதோசம், தலைவலி, உள்ளிட்டவற்றிற்க்கு தன்னிச்சையாக மருந்து வாங்கி உட்கொள்கின்றனர். இந்த நிலை முற்றிலும் மாற வேண்டும், மருத்துவர்கள் பரிந்துரையில்லாமல் சில்லரை விற்பனையாக யாருக்கும் மருந்து, மாத்திரைகள் வழங்க வேண்டாம் எனவும், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில் போதை மாத்திரைகள், ஊசிகள் ஆகியவற்றை தற்போது பலரும் பயன்படுத்துவதாக தகவல் வருகின்றது. இவைகள் விற்பனை செய்வதை மருந்து கடைகள் கைவிட வேண்டும் என கண்டிப்புடன் கேட்டுக் கொண்டார்.

மேலும், கடைக்கு வருபவர்களுக்கு கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் விதமாக முக கவசம், கிருமி நாசினி உள்ளிட்டவை வழங்கிட வேண்டும் எனவும், மருந்தகத்திற்கு வரும் நபர்களுக்கு கொரோனா நோயின் அறிகுறிகள் ஏதேனும் உள்ளனவையா என்பதனை கண்டறிய வேண்டும் எனவும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் உடனே அவர்கள் மருத்துவ கண்காணிப்பு குழுவினருக்கோ, காவல் துறையினருக்கோ உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

குறிப்பாக, மருந்தகங்களில் ஊசி போடக்கூடாது என கண்டிப்புடன் எச்சரித்தார். காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு கொடுத்து கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டுமாய் அன்புடன் வேண்டுகோள் விடுத்தார்.

Updated On: 27 May 2021 4:43 AM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    குறைந்த செலவில் பூச்சிக்கட்டுப்பாடு..! மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி..! ...
  2. ஈரோடு
    அந்தியூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து 10ம் வகுப்பு மாணவன்...
  3. தென்காசி
    மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து...
  4. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவில் அசத்திய மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள்..!
  5. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு - எஸ்பி...
  6. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!
  7. குமாரபாளையம்
    கத்தேரி பிரிவில் விளையாட்டு மைதானம், அரசு ஆரம்ப சுகாதார மையம் அமைக்க...
  8. ஈரோடு
    ஈரோடு: தாளவாடி அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி பரிதாப உயிரிழப்பு
  9. காஞ்சிபுரம்
    அதிகளவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த ஆண்கள்..!
  10. காஞ்சிபுரம்
    12 மணி நேரம் தொடர் பணி : வருவாய்த்துறை ஊழியர்கள் பணிக்கு வரவேற்பு..!