/* */

பெரியகுளம் நகராட்சியில் நமக்கு நாமே திட்ட ஆலோசனை கூட்டம்

நமக்கு நாமே திட்டத்தில் பெரியகுளம் நகராட்சியில் பல்வேறு திட்டப்பணிகளை நிறைவேற்ற இந்தக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது

HIGHLIGHTS

பெரியகுளம் நகராட்சியில்  நமக்கு நாமே  திட்ட ஆலோசனை கூட்டம்
X

பெரியகுளம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நமக்கு நாமே திட்ட ஆலோசனை கூட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

தேனி மாவட்டம், பெரியகுளம் நகராட்சியில் நமக்கு நாமே திட்டம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, பெரியகுளம் எம்.எல்.ஏ. சரணவக்குமார் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையாளர் பாலமுருகன், மற்றும் நகராட்சி அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.

பெரியகுளம் பஸ்ஸ்டாண்ட் பகுதியில் ரவுண்டானா அமைப்பது, அம்பேத்கர் சிலையில் இருந்து, பசும்பொன்தேவர் சிலை வரை ஹாலோபிளாக் நடைபாதை அமைப்பது, பழைய பஸ்ஸ்டாண்டை ஆம்னி பஸ்ஸ்டாண்ட் ஆக மாற்றுவது, வராக நதியை சுத்தப்படுத்துவது, நிரந்தர வாரச்சந்தை அமைப்பது, புதிய பஸ்ஸ்டாண்டினை இடம் மாற்றுவது, மின் மயானத்தை சரி செய்வது, கல்லறைகள் கட்டுவதை தடை செய்வது உட்பட பல்வேறு பணிகள் நமக்கு நாமே திட்டத்தில் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. பெரியகுளம் நகர் நலச்சங்கம், தன்னார்வலர்கள், பெரியகுளம் விளையாட்டு மைய நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், வங்கி அதிகாரிகள், நகராட்சி ஊழியர்கள் பங்கேற்றனர்.

Updated On: 2 Oct 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கண்ணெதிரே வாழும் கடவுள், 'அப்பா'..!
  2. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் விறுவிறுப்பு: 2 மணி நேரத்தில் 12.88 சதவீதம்...
  3. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  4. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  5. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  6. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  7. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. நாமக்கல்
    தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம்...