/* */

தேனி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழை: ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

தேனி மாவட்டம் முழுவதும் நேற்று பகலிலும், இரவிலும் பரவலாக மழை பெய்தது

HIGHLIGHTS

தேனி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழை:  ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
X

தேனி மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் நேற்று இரவு கொட்டித்தீர்த்த மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் நேற்று பகல் முழுவதும் சாரல் பெய்தது. இரவில் பலத்த மழை பெய்தது. வீரபாண்டியில் 42.00 மி.மீ., உத்தமபாளையத்தில் 37.1 மி.மீ., போடியில் 21.4 மி.மீ., கூடலுாரில் 32.4 மி.மீ., பெரியகுளத்தில் 14.4 மி.மீ., அரண்மனைப்புதுாரில் 10 மி.மீ., மழை பதிவானது. இதேபோல் அனைத்து இடங்களில் கூடுதல் மழையளவு பதிவானது.

இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வைகை ஆற்றில் விநாடிக்கு 2000ம் கனஅடியும், முல்லை பெரியாற்றில் விநாடிக்கு 2300 கனஅடியும், மஞ்சளாற்றில் 100 கனஅடியும் தண்ணீர் வெளியானது. வராகநதி, கொட்டகுடி ஆறு, சண்முகாநதி, சுருளி ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த ஆறுகளில் வெள்ளத்தின் அளவை கணக்கிடும் வசதி இல்லாததால் விவசாயிகள், பொதுமக்கள் கவனமுடன் செயல்பட வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 2 Nov 2021 4:00 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. ஆரணி
    ஸ்ரீபாஞ்சாலிஅம்மன் சமேத ஸ்ரீதா்மராஜா கோவிலில் ராஜசுய யாக வேள்வி
  5. நாமக்கல்
    நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் 1,260 மூட்டை பருத்தி ரூ. 30 லட்சம்...
  6. கலசப்பாக்கம்
    பருவத மலையில் கிரிவலம் வந்த பக்தர்கள்
  7. நாமக்கல்
    முட்டை விலை 30 பைசா சரிவு; கோழிப் பண்ணையாளர்கள் அதிர்ச்சி
  8. நாமக்கல்
    வரும் 27 முதல் ஜூன் 3 வரை நீச்சல் பயிற்சி; விருப்பம் உள்ளவர்களுக்கு...
  9. திருவண்ணாமலை
    வெப்ப அலை; பகல் நேரத்தில் வெளியில் வர வேண்டாம் என கலெக்டர் வேண்டுகோள்
  10. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் குப்பைகள் உடனுக்குடன் அகற்றம்; கலெக்டர் ஆய்வு